Ad Widget

விபத்தில் ஒருவர் பலி: சாரதிக்கு விளக்கமறியல்

சுன்னாகம் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில், ஒருவர் உயிரிழந்ததையடுத்து, விபத்துடன் தொடர்புடைய சாரதி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பகுதியினைச் சேர்ந்த வைத்தியலிங்கம் நடராஜா (வயது 79) என்ற நபர், வீதியில் நடந்துச் சென்ற போது, காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

படுகாயங்களுக்கு உள்ளான அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சாரதி, மல்லாகம் நீதிமன்ற பதில் நீதவான் ந.தம்பிமுத்துவின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, சாரதியை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

Related Posts