Ad Widget

போராட்டக்காரர்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்தனர்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் முன்னால், 5 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து, நேற்போறு ராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்தும் வகையில், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டவர்களுக்கு பதில் கூற வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், தொடர்ந்தும் காணிகள் ஆக்கிரமிப்பது நிறுத்தப்பட வேண்டும், இனப்படுகொலைக்கு நீதி வேண்டும், சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அவர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

Related Posts