- Tuesday
- May 12th, 2026
ஐந்து அம்சகோரிக்கையை முன்வைத்து 69வது சுதந்திர தினமான நாளை சனிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக கறுப்புப் பட்டி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாளை சனிக்கிழமை 69வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், காணாமல்...
இலங்கை போக்குவரத்து சபையின் தனித்துவத்தை சிதைக்கும் வகையில் தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இ.போ.ச பேருந்துகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள்களுக்கு கண்டனம் தெரிவித்தும் வட மாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டுவரும் நிலையில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் நடத்ப்பட்டுள்ளது.
நேற்றய தினம் காலை 9 மணி முதல் இந்த...
இன்றைய தினம் பரந்தளவிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று காலை 08 மணிமுதல் 12 மணி வரை 4 மணித்தியாலங்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது. சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் மீது, தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு...
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்.வட்டுக்கோட்டை சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் ஜெயரட்ணம் தனுஷன் அமலன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் இன்று யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த கொலை சம்பவத்தில் ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டதுடன், இன்று நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றன....
தேசத்திற்கான பெண்களின் உரிமைக்குரல் எனும் தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், கையெழுத்து வேட்டையும் யாழில் இடம்பெற்றது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும், ஜேர்மன் தூதரகமும், இணைந்து இன்று வியாழக்கிழமை யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இந்த துண்டுப்பிரசுர விநியோகத்தினை மேற்கொண்டிருந்தனர். கடந்த காலங்களில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்பட்டமையினால் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் பங்களிப்பினை அதிகரிக்க...
இலங்கை அரசாங்கம் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு நிலையான அபிவிருத்திச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற முயற்சிக்கின்றது. இதற்கு, முதற்கட்டமாக நிலையான அபிவிருத்திச் சட்டமூலமொன்றைத் தயாரித்து மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அனுப்பி வைத்திருக்கிறது. இது மாகாணங்களின் அதிகாரங்களைப் பறிப்பதாகவும், அரசியல் ரீதியாகத் தமிழ்மக்களைப் பாதிப்பதாகவும் உள்ளது. இதனாலேயே, இந்தப் புதிய அபிவிருத்திச் சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரித்துள்ளது என்று...
“மைதானத்தில் ஆடிக்கொண்டு இருந்த சிலர், எம்மைத் தாக்குவதற்காக ஓடிவந்தனர். அதனைக் கண்ட நான் ஓடினேன். ஓடிக்கொண்டே திரும்பிப் பார்க்கும் போது, எனது நண்பனான ஜெயரட்ணம் தனுஷன் அமலனை (உயிரிழந்தவர்) சூழ்ந்து நின்றிருந்தவர்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் கொட்டன்கள் கொண்டு தாக்கிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நான், திரும்பி ஓடி வந்த போது, நண்பன் நினைவற்றுக் கிடந்தான்”...
சித்தன்கேணி பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் சென்ற குழுவினர் கடை உரிமையாளரை தாக்கி அச்சுறுத்தியதுடன் ஒரு தொகையான பணத்தையும் அபகரித்து சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், சித்தன்கேணி டச்சு வீதியில் அமைந்துள்ள பலசரக்கு கடையொன்றினுள் நேற்று இரவு 7.45 மணியளவில் 4 பேரடங்கிய குழுவினர் வாள், பொல்லு, கத்திகளுடன் நுழைந்து உரிமையாளரை...
பங்களாதேஷில் இம்மாதம் 17 தொடக்கம் 23 வரை நடைபெறவுள்ள உலக்கக்கிண்ணப் போட்டியில் றோல் போல் விளையாட்டில் இலங்கையின் றோல் போல் தேசிய அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டு அவா்கள் போட்டியில் பங்குபற்றவுள்ளனா். கிளிநொச்சி இந்துக்கல்லூரி உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன் ,சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே குறித்த போட்டியில் பங்குபற்றுகின்றனர். அத்துடன் மிக...
பயணிகள் போக்குவரத்து பஸ்களில் சாரதிகளாக உள்ளவர்கள் பயணிகள் தொடர்பாக போக்குவரத்து திணைக்களத்தினால் பயிற்சியின் பின் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை வைத்திருப்பது கட்டாயம் எனவும், இது தொடர்பான சட்டம் ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் இவ்வருடத்தில் புதிதாக இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரையில்...
முல்லைத்தீவு மாவட்டம் – கேப்பாப்பிலவு கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள், தமது காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஆரம்பித்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இரவு பகலாக இன்று (வியாழக்கிழமை) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. கேப்பாப்பிலவு விமானப்படை தளத்தின் 2ஆவது நுழைவாயிலை மறித்து இம் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். யுத்த...
வடக்கை போன்று தெற்கிலும் அன்றாடம் வாளால் வெட்டிக் கொல்லப்படும் சம்பவங்கள் பதிவாகின்றன எனத் தெரிவித்துள்ள பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, வடக்கில் நடைபெறும் விடயங்களை மாத்திரம் பொய்யாக ஊதி பெரிதாக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து, அண்மையில் யாழ்.அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த...
வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் வழக்கு விசாரணை யாழ் மேல் நீதிமன்றத்தில் தொடர் விசாரணையாக நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையில் நடை பெற்ற கிரிக்கட் போட்டியின் போது ஏற்பட்ட குழு மோதலில் ஜெயரட்ணம் தனுசன் என்பவர்...
நல்லூர், கந்தர்மடத்தில் உள்ள பலசரக்கு கடை மீது, பெற்றோல் குண்டு வீசி, கடையில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஐவரும், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதுடன், யாழ். மாவட்ட நீதிமன்றில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அதன்போது, சந்தேகநபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் டி.சிவலிங்கம்,...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார் என்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். முக்கியமான இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை முன்னெடுக்காமல் தீர்வுத்திட்ட நடவடிக்கைகளுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரா.சம்பந்தன்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார்.ஜனாதிபதி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதியை திறந்துவைத்தார். இக்கட்டத்தொகுதி இரத்தவங்கி நவீன சத்திரசிகிச்சை கூடம் சட்ட வைத்தியபிரிவு கதிர்வீச்சு பிரிவு நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைபெறுவதற்கான வசதி மற்றும் நிர்வாகப்பிரிவு ஆகியன உள்ளடங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான நிகழ்வு கிழக்கு...
யாழ்.கஸ்தூரியார் வீதியில் வீடொன்றின் முன் நின்றிருந்த இளைஞர்கள் மீது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ஒன்று வாள்வெட்டு நடத்த முயன்ற நிலையில் குறித்த இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து தப்பியுள்ளனர். நேற்றய தினம் மாலை 6.40 மணியளவில் கஸ்தூரியார் வீதியில் உள்ள வீடொன்றுக்கு முன் 4...
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர். அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும்...
எதிர்வரும் 04 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு பருத்தித்துறை முனையில் இருந்து தெய்வேந்திரமுனை வரையான சமாதான பாதை சைக்கிள் ஒட்டமும், வாகனபேரணியும் தென் இலங்கை சார்ந்த ஆர்.பீரிஸ் என்பவரினால் நேற்றுக் காலை 07.30 மணியளவில் பருத்தித்துறை முனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. தமிழ், சிங்கள, முஸ்ஸிம், கிறிஸ்தவ மக்களிடையே நல்லிணக்கம்,...
யாழில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் மூவரும் பொலிஸாரால் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மூன்று மாணவர்களும் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வந்து இறங்கியபோது, அங்கிருந்த நபரொருவரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளனர். சென்.பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களான, யாழ் குருநகர் பகுதியைச் சேர்ந்த தர்மஜோதி ராஜ்குமார் (வயது 14), ஹென்றிமோன் அபிசேன் (வயது...
Loading posts...
All posts loaded
No more posts
