முன்னாள் போராளிகள் அச்சமடைய தேவையில்லை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பாக முன்னாள் போராளிகள் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உங்களுக்காக நான் நிச்சயம் குரல் கொடுப்பேன் என்று ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் பொது செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய என்.கே.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். உங்களது நியாயங்களை நான் நிச்சயம் பாதுகாப்பதுடன் உங்களது வாழ்வியலில் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை நிச்சயம்...

நாம் அனைவரும் இலங்கையர் என்று கூறுவது பிரச்சினைக்கு தீர்வாகாது

வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடாமல் கூட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகளின் போதும் "நாம் அனைவரும் இலங்கையர்" என்று கூறுவது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் கருத்துக்கு பதில் வழங்கும் முகமாகவே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் கூறியுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில்...
Ad Widget

மன்னாரில்கூ ட்டுறவுத் திணைக்களத்துக்குப் புதிய அலுவலகக் கட்டிடம் திறந்து வைப்பு

மன்னாரில் முருங்கன் செம்மண்தீவில் கூட்டுறவுத் திணைக்களத்தின் புதிய அலுவலகக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளரின் பணிமனை இயங்கவுள்ள இந்தக் கட்டிடம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (02.02.2017) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ரூபா 15 மில்லியன் செலவில் கட்டப்பட்டுள்ள இதனை வடக்கு கூட்டுறவு அமைச்சர்பொ.ஐங்கரநேசன் திறந்து வைத்துள்ளார். மன்னார் மாவட்டக் கூட்டுறவு உதவி...

சுமந்திரன் கொலை முயற்சியுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றுமொரு நபரையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். மன்னாரைச் சேர்ந்த வீ.விஜயன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்....

அதிக விலைக்கு அரிசி விற்றால் கடும் நடவடிக்கை

அதிக விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் வியாபாரிகள் அனைவருக்கும் எதிராக, நுகர்வோர் அதிகார சபை ஊடாக, இன்றிலிருந்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! : அமைச்சர் பா.டெனிஸ்வரனின் உருவப் படம் எரிப்பு

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனின் உருவப் படத்தினையும் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட 06 அம்ச கோரிக்கையும் இன்று யாழ்ப்பாண மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் எரியூட்டி தமது கவனயீர்ப்பினை வெளியீட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று முன்தினம் தனித்துவத்தை சிதைக்கும் வகையில் தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இ.போ.ச பேருந்துகள்...

சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ள கேப்பாப்பிலவு மக்கள்

இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம் நாளை (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், நாளைய தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளதாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு கிராம மக்கள் எச்சரித்துள்ளனர். இதேவேளை, தமது காணிகளை ஆக்கிரமித்துள்ள ராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றி தங்களின் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி...

வடக்கு முதல்வர் தொடர்பில் இந்திய மத்திய அரசு வருத்தம்!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இந்திய மத்திய அரசினால் பல்வேறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாண சபை பிரித்தானியாவின் தெற்கு லண்டனில், கிங்ஸ்டன் நகர சபையுடன் (Kingston Borough Council) கடந்த வருட இறுதிப் பகுதியில் இணைந்திருந்தது. இது தொடர்பிலேயே இந்திய அரசாங்கத்தினால் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு இணைவதற்கு...

யாழில் தனியார் மருத்துவ கல்லூரியை உருவாக்க முயற்சி!

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதியை அடுத்து, நாட்டில் மேலும் பல வைத்திய கல்லூரிகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மனிபால் பல்கலைக்கழகத்தின் இணைப்பாக களுத்துறை பிரதேசத்தில் கொழும்பு மற்றும் கண்டியின் பிரதான தரப்பின் தனியார் வைத்தியசாலைகள் இரண்டினை அடிப்படையாக கொண்டு, புதிய தனியார் வைத்திய...

அமுலுக்கு வருகிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்றுமுதல் அமுலுக்கு வருகிறது. அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இதன்மூலம் அரசாங்கம் நிதியை பயன்படுத்தும் விதம் பற்றியும், தீர்மானங்களை மேற்கொள்ளும் விதம் தொடர்பாகவும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்...

ட்ராம்பின் தீர்மானத்தினால் இலங்கையர்களுக்கு பாதிப்பு எதுவும் கிடையாது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் தீர்மானத்தினால் இலங்கையர்களுக்கு பாதிப்பு கிடையாது என வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேசினி கொலன்ணே தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜோன் எப். கென்னடி விமான நிலையத்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட 71 வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாதிருப்பதாக வெளியான தகவல்கள் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த எவரும்...

அமைச்சர் ராஜித மக்களின் உயிரோடு விளையாடுகிறார்: மருத்துவ அதிகாரிகள் சங்கம்

குறைந்த விலையில் மக்களுக்கு மருந்து வழங்க நடவடிக்கை எடுத்ததுபோல், குறைந்த விலையில் வைத்தியர்களை நியமித்து நோயாளிகளின் உயிரோடு விளையாட அமைச்சர் ராஜித முற்படுகிறார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் விசேட செய்தியாளர் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சங்கத்தின் செயலாளர் நவீன்...

ராணுவத்தினர் ஜனாதிபதியை அவமானப்படுத்துகின்றனர்: ஆனந்தசங்கரி

ஜனாதிபதியின் உத்தரவை மீறி காணிகளை விடுக்காது இழுத்தடிப்பு செய்யும் ராணுவத்தினரின் செயற்பாடு, ஜனாதிபதியை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமது காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரி தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு கிராம மக்களை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே...

பொதுமக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்று; மற்றுமொரு போராட்டம் ஆரம்பம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் புதுக்குடியிருப்பு பிரசெயலக நுழைவாயிலை வழிமறித்து பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கேப்பாபுலவு பிலவுகுடியிருப்பு மக்களின் போராட்டம் 5 ஆவது நாளாகவும் தொடர்கிறது

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு கிராம மக்கள் ஐந்தாவது நாளாகவும் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தமது காணிகளை மீள வழங்க வேண்டும் என வலியுறுத்திகடந்த திங்கட்கிழமையிலிருந்து போராட்டத்தை பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

கிரிக்கெட் போட்டி மோதல்; கொலை தொடர்விசாரணை வழக்கு ஒத்திவைப்பு

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியின் போது ஏற்பட்ட குழு மோதலில் இடம்பெற்ற கொலை தொடர்பில் நேற்றயதினம் நடைபெறவிருந்த தொடர்விசாரணை யாழ்.மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை சம்பவத்தில் சிவசண்முகநாதன் மதுஷன், இந்திரசீலன் பிருந்தாபன், ரமேஷ் வெண்டில்கரன், நேசரட்னம் கஜேந்திரன்,...

மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்!

குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி மீது கணவன் கத்தி வெட்டு தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் சாவகச்சேரியில் பதிவாகியுள்ளது. உதயசூரியன், கச்சாய் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், இராகுலன் சுகந்தி (வயது 30) என்ற பெண்ணே, தலையில் வெட்டுக்காயங்களுக்கு இலக்கான நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய கணவனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு...

முதலமைச்சருக்கும் கூடுதல் பாதுகாப்பு

கிளிநொச்சி, வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒரு மாடி வகுப்பறை கட்டடத்தை, வட மாகாண முதலமைச்சா் சி.வி.விக்கினேஸ்வரன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், கலந்துகொள்ள வந்த முதலமைச்சருக்கு வழமைக்கு மாறாக, பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சரின் பிரத்தியேக பாதுகாப்பு பொலிஸாரை விட, சுமார் 25க்கும் மேற்பட்ட துப்பாக்கியேந்திய பொலிஸார், ஆயுதமற்ற நிலையிலான 15க்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும்...

ஐந்து இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட ஐந்து இந்திய மீனவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட்டிருந்த போது கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இந்தியாவில் ஜகதாளப்பட்டினத்தை சேர்ந்தவர்கள்.

மீனவர் பிரச்சினை : வடபகுதி கடற்றொழிலாளர் குழுவொன்று இந்தியா செல்கிறது

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடபகுதி கடற்றொழிலாளர் குழுவொன்று 25ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளது. இந்தக் குழுவில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 12 பிரதிநிதிகள் இடம்பெறவுள்ளதாக கடந்நொழில் மற்றும் கடல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 'குளத்துடன் கிராமம்' என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்...
Loading posts...

All posts loaded

No more posts