- Tuesday
- May 12th, 2026
கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் இம்மாதம் ஏழாம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக கல்வியியல் கல்லூரி பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டரா தெரிவிக்கையில்: பஸ்துன்ரட்ட மற்றும் மஹரகம ஆகிய பிரதேசங்களின் கல்லூரிகளை தவிர நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சைகள் ஏழாம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளது என்றார். கல்வியாண்டுக்கு நான்காயிரத்து 69...
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான விடுதியொன்றில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் 69 வது சுதந்திர தினம் நாடளாவிய ரீதியாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மதுபானசாலைகளை மூடுவதற்கும், வேறு விதத்தில் மதுபானங்கள் விற்பனை செய்வதற்கும் அரசாங்கம் தடை விதித்திருந்தது.
இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தில் விடுதி ஒன்றில் அரசாங்கத்தின்...
யாழ்ப்பாண குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொஸிஸ் புலனாய்வு பிரிவினர் இது தொடர்பாக தகவல் வௌியிட்டுள்ளனர். இந்த குழுக்களின் பெரும்பாலானவை வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டிருப்பது முக்கிய அம்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில்...
நாடு முழுவதிலுமுள்ள ச.தொ.ச. கிளைகளில் ஒரு கிலோ அரிசியை 66 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ள முடியும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய ரீதியிலுள்ள 340 கிளைகளில் நாட்டரிசி மற்றும் பச்சை அரிசி என்பவற்றை 66.00 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவுக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட...
கடந்த 4 ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்படும் வரையில் முன்னர் எவ்வாறு இரு தரப்பு பேரூந்து சேவைகளும் இடம்பெற்றதோ அதேபோன்று சேவைகள் இடம்பெறும் என தீர்மானம் எடுக்கப்பட்டதையடுத்து குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) வட மாகாண...
படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள் இரவு பகலாக முன்னெடுத்துவரும் சத்தியாக்கிரக போராட்டம், ஆறாவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கின்றது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் இப்பகுதி மக்களுக்குச் சொந்தமான காணிகளை கையகப்படுத்தி விமானப்படையினரும் ராணுவத்தினரும் முகாமிட்டுள்ளனர். குறிப்பாக பிலக்குடியிருப்பு கிராமத்தில் 84 குடும்பங்களுக்குச்...
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு உள்ள இரண்டு சந்தேகநபர்களும் கொலை நடந்த சமயம் பிறிதொரு இடத்தில் நின்றதாக சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, 'நகர்த்தல் பத்திரம்' தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் குறித்த வழக்கினை, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (03) ஊர்காவற்துறை...
சமய நிறுவனங்கள், கோயில்கள் போன்றவை தமது கட்டடங்களைப் புதுப்பித்து சுத்தமாக, சுகாதாரத்துடன் அவற்றைப் பராமரிக்கும் அதே வேளையில், மக்கள் பணியில் ஈடுபடவும் முன்வர வேண்டும். பணமானது மக்களிடையே புழங்க இடமளிக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பூநகரி பிரதேச வைத்தியசாலைில் குடிநீர் சுத்திகரிப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, நடைபெற்றது. இதன்போதெ...
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் முன்னால், 5 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து, நேற்போறு ராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்தும் வகையில், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டவர்களுக்கு பதில் கூற வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், தொடர்ந்தும் காணிகள் ஆக்கிரமிப்பது நிறுத்தப்பட...
நாடு சுதந்திரம் அடைந்து 69 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இன்றும் எம் மக்கள், அவர்களது உரிமைகளுக்காகப் போராடவேண்டியுள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்தார். கேப்பாபுலவு - புலவுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம்மக்களின் பிரச்சினை தொடர்பில், விமானப்படையினரிம் கலந்துரையாடுவதற்காக, வட மாகாண...
கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று இடம்பெற்ற, 69ஆவது வருட சுதந்திரதின நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் கலந்துகொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மட்டுமே கலந்து கொண்டார். 'திருகோணமலையில் உள்ள ஆலயமொன்றில் இடம்பெறும் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துக்கொள்ளச் சென்றுள்ளமையால், எதிர்க்கட்சித் தலைவரால் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ள...
முப்படை மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ்ப்பாணத்தில் 69 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களின் மேலைத்தேய இசை வாத்தியங்களும் முழங்க, சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது....
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதானச் செய்தியை தாங்கிய புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. நேற்று காலை (04) கிளிநொச்சி புகையிரத நிலைய முன்றலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. குறித்த புறாக்கள் சுமார் நான்கு மணித்தியாலயங்களில் கொழும்பைச் சென்றடையும் என ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா். சிறிய துண்டு ஒன்றில்...
சட்டவிரோத மதுபாவனை மற்றும் விற்பனை தொடர்பில் கடந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 1,575 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மது வரித் திணைக்களத்தின் வடமாகாண பொறுப்பதிகாரி சோதிநாதன்தெ ரிவித்தார். யாழ்ப்பாணம், சாவகச்சேரி, சங்கானை, மல்லாகம், பருத்தித்துறை, ஆகிய இடங்களில் உள்ள மதுவரித் திணைக்களத்தின் அலுவலகங்களில் கடந்த வருடத்தில் மட்டும் 1,575 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் சட்டவிரோதமாக...
சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதோர் தேசத்தில் சமாதானமும் சுபீட்சத்துடனும் வாழும் பாக்கியம் எமக்கு கிட்ட வேண்டும் - ஜனாதிபதி நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதோர் தேசத்தில் சமாதானமும் சுபீட்சமும் கிடைக்கப்பெற்ற மக்களாக வாழும் பாக்கியம் எமக்கு கிட்ட வேண்டும் என்று 69ஆவது சுதந்திர தினத்தையிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்...
மல்லாகத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்ட இருயுவதிகளின் வீட்டுக்கு யாழ் கட்டளை தலைமையகத்தையைச் சேர்ந்த பெண் இராணுவத்தினர் நல்லெண்ண விஐத்தை மேற்கொண்டனர். அங்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட இருயுவதிகளில் ஒருவரின் பிறநத் தின நிகழ்விலும் இவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பெண் இராணுவத்தினர் உதவிகளையும் வழங்கினர்.
இராணுவத்தினர் தமது காணிகளை விடுவிக்காவிட்டால் தீக்குளிக்கப் போவதாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டம் நேற்று காலை முதல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்று வருகின்றது....
போர்க்குற்ற விசாரணை தேவையற்றது என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக உள்ள சந்திரிகா குமாரதுங்க, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார். ‘நல்லிணக்கம் என்பது ஒரு நீண்ட செயற்பாடு. இப்போது அவசியமாகத் தேவைப்படுவது புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதும், காணாமல்...
மக்களின் நன்மை கருதி அரிசிக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோகிராம் அரிசியினை 66 ரூபாவிற்கு விற்பனை செய்யலாம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அமைச்சர், ‘மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில்...
உரும்பிராய் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் கடமையிலிருந்த, விசேட அதிரடிப்படையினரை கண்டு தப்பித்து ஓடிய நபர்களிடம் இருந்து வாள்கள் மிட்கப்பட்டுள்ளன. கோப்பாய்கப் பொஸிசார் நேற்று இந்த தகவலை வௌியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் கடமையிலிருந்த சமயம் மோட்டார் வண்டி ஒன்றில் இரு வாள்கள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்து கொண்டிருந்த...
Loading posts...
All posts loaded
No more posts
