Ad Widget

முதலமைச்சருக்கும் கூடுதல் பாதுகாப்பு

கிளிநொச்சி, வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒரு மாடி வகுப்பறை கட்டடத்தை, வட மாகாண முதலமைச்சா் சி.வி.விக்கினேஸ்வரன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், கலந்துகொள்ள வந்த முதலமைச்சருக்கு வழமைக்கு மாறாக, பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

முதலமைச்சரின் பிரத்தியேக பாதுகாப்பு பொலிஸாரை விட, சுமார் 25க்கும் மேற்பட்ட துப்பாக்கியேந்திய பொலிஸார், ஆயுதமற்ற நிலையிலான 15க்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள், குறித்த வளாகம் மற்றும் வளாகத்தை சூழ நின்று பாதுகாப்பு வழங்கினர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுமந்திரன் எம்.பியின் பாதுகாப்பு அதிகரிப்பு

Related Posts