வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது!! ஆயுதங்களும் மீட்பு!

யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் நேற்று முன்தினம் யாழ்.அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 5 பேர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 யாழ். மாவட்டத்தில் குறிப்பாக நகரப் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே...

வடமாகாணத்தில் பாரியளவான நெற்செய்கை நிலங்கள் அழிவடைந்துள்ளன

வடமாகாணத்தில் மானாவாரி மற்றும் பெரிய, சிறிய குளங்களை நம்பி மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற்செய்கையில், சுமார் 28 ஆயிரத்து 802.5 ஏக்கர் நெற்செய்கை 100 வீதம் அழிவடைந்துள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய இரு மாவட்டங்களிலும் 21 ஆயிரத்து 170 ஏக்கர் நிலத்தில் செய்யப்பட்ட நெற்செய்கை 100 வீதம் அழிவடைந்துள்ளது. மேற்கண்டவாறு வடமாகாண விவசாய அமைச்சு தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன....
Ad Widget

மிருசுவிலில் பொது மக்கள் பலரைக் கொன்ற மரண தண்டனை கைதியான இராணுவ வீரருக்குப் பொதுமனின்ப்பு?

மிருசுவிலில், பொது மக்கள் பலரைக் கொன்றதாகக் குற்றம் காணப்பட்டு, மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரருக்குப் பொதுமனின்ப்பு வழங்குமாறு கோரி, தாய் நாட்டுக்கான போர்வீரர்கள் நிறுவனம், ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. தாய் நாட்டுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருந்த பதவிநிலை அதிகாரியான சார்ஜன்ட் ரத்னாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, இந்த அமைப்பின் ஏற்பாட்டாளர், மேஜர்...

சிறுப்பிட்டி கொலை வழக்கு ஐந்து இராணுவத்தினருக்கு பிணை!

சிறுப்பிட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 14 இராணுவத்தினரில் ஐவருக்கு நேற்றையதினம் யாழ். மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது. 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதனுடன் தொடர்புபட்டதாக குற்றஞ் சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரை அச்சுவேலி காவல்துறையினர் கைது செய்தனர். எனினும் 1998ம் ஆண்டு நீதவான் நீதிமன்றம்...

கொட்டும் பனியிலும் இரவோடுஇரவாக 2 ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் இரண்டாவது பிரதான வாயில் முன்னால் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட மக்களின் போராட்டமானது நேற்று இரவும் கொட்டும் பனி இரவையும் தாண்டி இன்றும் இரண்டாவது நாளாக தொடர்ந்த வண்ணமுள்ளது. விமானப்படையினர் வசமுள்ள 30 ஏக்கர் காணியை நேற்று விடுவிப்பதாக அரச அதிகாரிகள் மக்களுக்கு தெரிவித்தபோதிலும் அது நேற்றைய தினம் விடுவிக்கப்படவில்லை....

தரமான தலைக்கவசம் அணியும் சட்டம் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுல்

மோட்டார் சைக்கிளில் பயணிப்போருக்கான தரம் வாய்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய தலைக்கவசம் அணியும் சட்டம் எதிர்வரும் ஏப்றல் மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை தரப்படுத்தும் நிறுவனமும், நுகர்வோர் அதிகார சபையும் இந்த பணிக்கு...

பல்கலை கல்விசாரா ஊழியர்கள் 7 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில்

சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு சுற்றுநிருபம் வெளியிடப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழகங்களிலுள்ள 14 ஆயிரம் கல்விசாரா ஊழியர்கள் எதிர்வரும் 07 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அகில இலங்கை பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக் குழு நேற்று (31) கூடியபோது இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்த தீர்மானங்களை எடுக்க எதிர்வரும்...

கழிவு ஒயில் வழக்கு;ஆட்சேபனை சமர்பிக்க வடமாகாண சபைக்கு ஒருமாத அவகாசம்

யாழ்.சுன்னாகம் கழிவு எண்ணெய் விவகார வழக்கில் ஆட்சேபனைகள் இருந்தால் அவற்றை ஒருமாத காலத்திற்குள் சமர்பிக்குமாறு உச்சநீதிமன்றம் வடமாகாண சபைக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற நீதியரசர்களான பிரியசாத் டெப், புனநேக அலுவிஹார ஆகியோர் தலைமையிலான குழாம் முன்னிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மனு விசாரணையின்போது இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பகுதியிலுள்ள நோதன் பவர்...

12,500 முன்னாள் போராளிகளையும் உடன் கைதுசெய்க!! ; சம்பிக்க ரணவக்க

ஸ்ரீலங்கா இராணுவம் இழைத்திருக்கும் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யவேண்டும் என தமிழர் தரப்பு கூறுவதுபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விடுவிக்கப்பட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் மீண்டும் கைது செய்ய வேண்டுமென மேல்மாகாண அபிவிருத்தி, மெகா பொலிஸ் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார். போர்க் குற்றம் தொடர்பான உள்ளகப் பொறிமுறைக்கு சர்வதேச...

யாழ். மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் 512 பேருக்கு டெங்கு!

யாழ். மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் 512 பேருக்கு டெங்கு நோயின் தாக்கம் காணப்படுவதாக யாழ். மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமாரன் தெரிவித்தார். நேற்றய தினம் யாழ் மாவட்ட டெங்கு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,...

நன்னீர் கிணறு கழிவுநீர் தொட்டியாக மாற்றம்! பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

வல்வெட்டித்துறை காவல் நிலையதிற்கு பின்னால் உள்ள தனியார் காணியில் உள்ள நன் நீர் கிணறினை காவல் நிலைய கழிவு நீர் தேக்கி வைக்கும் குழியாக மாற்றி வைத்திருப்பதால் கிணறு மாசடைந்து காணப்படுவதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். நேற்றய தினம் யாழ் மாவட்ட டெங்கு தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்றது....

தீர்மானம் எடுக்க வைத்தியர்கள் ஆயத்தம்

நாட்டின் வைத்தியர்களின் தரத்தைப் பாதுகாப்பதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதில் பின்வாங்க போவதில்லை என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதற்காக சர்வதேசத்தின் தலையீட்டை பெற்றுக்கொள்ள வைத்தியர்கள் சங்கத்தினர் தயாராகியுள்ளதாக, அந்தச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமந்த ஆனந்த, தெரிவித்துள்ளார். மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் பட்டம்பெறும் பட்டதாரி, இலங்கை வைத்தியர் சங்கத்தில் பதிவுசெய்யும்...

நெடுந்தாரகை குறித்து விசாரணை நடத்தி விரைவில் பதிலளிக்கப்படும்!

நெடுந்தீவு மக்களின் கடல் பயணத்தை இலகுபடுத்தும் நோக்கில் புதிதாக கட்டப்பட்ட ´´நெடுந்தாரகை´´ படகு வெள்ளோட்டம் விடப்பட்டதன் பின்னர் பயணிகள் சேவையில் ஈடுபடவே இல்லை என, வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நிலையில், உடனடியாக இது குறித்து விசாரணை நடத்தி அடுத்த அமர்வில் பதிலளிக்கப்படும், என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். வட...

யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 8 பேருக்கு பிணை

யாழில் இடம்பெற்ற பல்வேறு வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களுக்கு யாழ் மேல் நீதிமன்றம் கடும் எச்சரிக்கையின் பின் பிணை வழங்கியுள்ளது. யாழில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட “றோக் ரீம்” என்ற குழுவை யாழ் பொலிஸார் தீவிர தேடுதலில் பின் கைது செய்தனர். குறித்த நபர்களிடம் இருந்து...

மீண்டும் காலநிலையில் மாற்றம்! வடக்கில் கடும் குளிர் காலநிலை!!

நாட்டின் வடக்கு பிரதேசங்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் எதிர்வரும் நாட்களில் குளிர் காலநிலை ஏற்படக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.தென் மாகாணத்தில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.மேல், சப்ரகமுவ மற்றும்...

பெற்றோர்களுக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்

பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது பற்றுச்சீட்டு வழங்காமல் பணம் அறவிடப்படுமாயின் , உடனடியாக அது தொடர்பில் அறிவிக்குமாறு கல்வி அமைச்சு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.இவ்வாறு பணம் அறவிடப்படுமாயின் அருகில் அமைந்திருக்கும் வலயக் கல்வி அலுவலகத்தில் அல்லது உள்ளூர் அலுவலகத்தில் அறிவிக்குமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மாணவர்களை  இணைத்துக்கொள்வதற்காக பணம் அறவிடப்படுவதாக...

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழி மூல டிப்ளோமா பயிற்சி நெறி

இன,மத,மொழி வேறுபாடின்றி அனைத்து பொது மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்க வேண்டும் எனும் நோக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் வழிகாட்டலில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான 5மாத தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சி நெறியின் 14வது தொகுதியினருக்கான பயிற்சி...

வடமாகாண அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றதன் பின்னரே கனடாவிற்கு விஜயம் செய்தேன்

கனடா ஒன்றாரியோ மாநிலத்திற்கு வடமாகாண அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றதன் பின்னரே விஜயம் செய்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் வடமாகணசபையின் 83 ஆவது அமர்வு இன்றைய தினம் மாகாண சபையின் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது எதிர்கட்சி தலைவர் சி.தவராசா முதலமைச்சரை நோக்கி கனடா நாட்டின் ஒன்றாரியோ மாநிலத்தின் பிறம்ப்ரன், மார்க்கம்...

சைட்டம் பல்கலையில் வழங்கப்படும் பட்டம் சட்டரீதியானதே;நீதிமன்றம் தீர்ப்பு

மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (சைட்டம்) வழங்கப்படுகின்ற பட்டம் சட்டரீதியானது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றைய தினம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் அந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவுபெற்று வெளியேறும் மாணவர்கள் மருத்துவப் பேரவையில் தொழிற்துறையினராக பதிவுசெய்துகொள்வது அவசியமாகும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் மருத்துவப் பேரவைக்கு உத்தரவிட்டுள்ளது. மாலம்பே பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற இரண்டு மருத்துவப்பீட மாணவர்கள் தாக்கல் செய்த...

யாழ், அரசடியில் வாள்வெட்டு : ஐவர் அடையாளம் காணப்பட்டனர்

யாழ்ப்பாணம் அரசடி வீதியிலுள்ள கடையொன்றில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இளைஞர்கள் கடையொன்றில் பணியாற்றிய இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளதுடன், கடைக்கும் தீயிட்டமை தொடர்பில் யாழ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். குறித்த கடையினூள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமரா பதிவுகளை...
Loading posts...

All posts loaded

No more posts