Ad Widget

தீர்மானம் எடுக்க வைத்தியர்கள் ஆயத்தம்

நாட்டின் வைத்தியர்களின் தரத்தைப் பாதுகாப்பதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதில் பின்வாங்க போவதில்லை என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதற்காக சர்வதேசத்தின் தலையீட்டை பெற்றுக்கொள்ள வைத்தியர்கள் சங்கத்தினர் தயாராகியுள்ளதாக, அந்தச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமந்த ஆனந்த, தெரிவித்துள்ளார்.

மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் பட்டம்பெறும் பட்டதாரி, இலங்கை வைத்தியர் சங்கத்தில் பதிவுசெய்யும் உரிமை உள்ளது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பினை அடுத்து, அச்சங்கம் ஏற்பாடுச் செய்திருந்த ஊடகவிலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

Related Posts