யாழ் குருநகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மூவர் மாயம்

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள், காணாமல் போயுள்ளதாக அவர்களது பெற்றோரால், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், திங்கட்கிழமை (30) இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியினை சேர்ந்த தர்மஜோதி ராஜ்குமார் (வயது 14), ஹென்றிமோகன் அபிசேக் (வயது 14) மற்றும்...

டெங்கு ஒழிப்புக்கு புதிய செயற்றிட்டம்

வேகமாகப் பரவிவரும் டெங்கு நோயை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களுக்கு மேலதிகமாகப் புதிய செயற்திட்டமொன்று, அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படுமென, ஜனாதிபதி தெரிவித்தார். உயிர்க்கொல்லி டெங்கு நோயை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்றிட்டங்களை மேலும் பலப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய செயற்றிட்டம் வெற்றிபெறுவதற்கு நாட்டு மக்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். தேசிய பல் மருத்துவமனையின் (போதனா) முதற்...
Ad Widget

‘இயக்கங்கள் துப்பாக்கித் தூக்க முன்னரே இராணுவம் துன்புறுத்தியது’

இலங்கை அரச படைகளை நோக்கி, இயக்கங்கள் துப்பாக்கி தூக்க முன்னர் இருந்தே, அரச படைகளும் குண்டர்களும், அப்பாவித் தமிழ் மக்களை இன்னலுறச் செய்து வந்துள்ளன. இரக்கமின்றிச் சுட்டுக்கொன்று வந்துள்ளனர். குத்திக் கொன்றுள்ளனர். அதனால்தான், எமது வடமாகாண சபை இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணையை ஏகமனதாக 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இயற்ற வேண்டி வந்தது’...

நீதிமன்றங்களில் வெற்றிடம் : 180 பேருக்கு வாய்ப்பு

நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு புதிதாக 180 பேரை நியமிக்கவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இவர்களுக்கான நியமனம் எதிர்வரும் 2ம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வடமாகாண அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவின் காலம் நீடிப்பு

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக வடமாகாண முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் கால எல்லை மேலும் 2 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளது.

 வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடமாகாண சபையின் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து வடமாகாண முதலமைச்சரினால் விசாரணை குழு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. மேற்படி விசாரணை குழு தற்சமயம்...

யாழில். வாள் வெட்டுக் குழு அட்டகாசம்: பெற்றோல் குண்டுத் தாக்குதல்!!

யாழ்.அரசடி பகுதியில் உள்ள கடை ஒன்றிற்குள் நேற்று(திங்கட்கிழமை) இரவு நுளைந்த இனந் தெரியாத கும்பல் ஒன்று வாள்களால் இருவரை வெட்டியுள்ளதுடன், கடை மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலையும் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் கடையில் வேலை செய்யும் இளைஞர் ஒருவரும், கடைக்குப் பொருட்கள் வாங்க வந்த ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த தாக்குதல்...

போர்க்குற்ற விசாரணை ஜெனிவாவில் இருந்து முடுக்கி விடப்பட்டுள்ளன; சீ.வி. விக்னேஸ்வரன்

இலங்கை அரச படைகளை நோக்கி, இயக்கங்கள் துப்பாக்கிகளைத் தூக்குவதற்கு முன்னரே அரச படைகளும் குண்டர்களும் அப்பாவித் தமிழ் மக்களை இன்னலுறச் செய்து வந்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இரக்கமின்றிச் சுட்டும், குத்தியும் கொன்றதனாலேயே வடமாகாண சபை இனப் படுகொலை சம்பந்தமான பிரேரணையை ஏகமனதாக 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம்...

சுமந்திரனைக் கொல்ல முயன்றவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் 5 முன்னாள் போராளிகளுக்கு விளக்கமறியல்!

பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட ஐந்து முன்னாள் போராளிகளும் நேற்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது அவர்கள் ஐவரையும் எதிர்வரும் 13ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த ஐவரும் அதிக வலுக்கொண்ட ஆயுதங்கள் வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குணசேகரலிங்கம் ராஜ்மதன்(அச்சுவேலி), கே.குலேந்திரன்(திருவையாறு-கிளிநொச்சி), எம்.தவேந்திரன்(கிளிநொச்சி), வி.விஜயகுமார்(மன்னார்), லூவிஸ்...

தமிழ் இளைஞர்கள் கொலை வழக்கு: இராணுவத்தினருக்கு விளக்கமறியல் நீடிப்பு

சிறுப்பிட்டி கொலை வழக்கில் சந்தேகநபர்களான 14 இராணுவத்தினரின் விளக்கமறியல் மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டுவில் வடக்கை சேர்ந்த செல்வரத்தினம் ஜெயசீலன், நாகமணி சௌந்தரராஜன் ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்த 1997ம் ஆண்டு ஒக்டோபர் 28ம் திகதி மயிலங்காட்டு பகுதிக்கு உறவினருடைய திருமணத்துக்காக சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் இருவரும் சிறுப்பிட்டி புத்தூர் வாதரவத்தையில் அமைந்திருந்த இராணுவ...

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதி வைத்தியசாலையில்!

பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவரில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றுமொருவர் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டமையால் சுகயீனமுற்ற நிலையில் அவர் நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்கவேலு நிமலன் என்ற தமிழ் அரசியல் கைதியே தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூசா தடுப்பு...

சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்று தான் இருக்க வேண்டிவரும் ; நாவற்குழி சிங்கள மக்கள்

எங்களுக்கு வீடுகளை வழங்ககக் கூடாது எங்களை வெளியேற்றுங்கள் என்றால் எங்கள் சொந்த இடத்திலிருந்து நாங்கள் எங்கு செல்வது, அவ்வாறு எங்களை விரட்டினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்குச் சென்று தான் இருக்க வேண்டி வரும் என நாவற்குழியில் குடியமர்ந்திருக்கின்ற சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியமர்ந்துள்ள தமிழ்,...

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து வவுனியாவில் ரகசிய கூட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் தொடர்பான சந்திப்பொன்று வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள அமைதியகத்தில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் ரகசியமாக நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு ஊடவியலாளர்கள் சென்றபோதிலும், அனுமதி மறுக்கப்பட்டதோடு வாயிற்கதவு உட்புறமாக பூட்டப்பட்ட நிலையிலேயே இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதிநிதியும் தமிழர் தாயகத்தில்...

எழிலன் உள்ளிட்ட ஐந்து பேரின் ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேரின்ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை மார்ச் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்கொண்ர்வு மனு தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எஸ்.எம்.எஸ் சம்சுதீன்...

நாவற்குழி வீட்டுத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

நாவற்குழியில் உள்ள, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில், மானிய அடிப்படையில் கட்டிக் கொடுக்கப்படவுள்ள 250 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா, இன்று காலை இடம்பெற்றது. யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். பல வருடங்களாக, அடிப்படை வசதிகள் அற்ற நிலையில், குடிசைகளில் வாழ்ந்து வருபவர்களின் நலன் கருதி, மானிய...

பெண்மீது கத்திக்குத்து: சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம், கல்லுண்டாய் வெளிபகுதியில் பெண் மீது, முகத்திலும் மார்பிலும் கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பில், பொம்மை வெளிபகுதியினை சேர்ந்த 42 வயதுடைய நபரை ஞாயிற்றுக்கிழமை, கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சோமசுந்தரம் வீதி ஆணைக்கோட்டை பகுதியினை சேர்ந்த எஸ்.வசந்ததேவி (வயது 38) என்றப் பெண், கத்திக்குத்துக்கு சனிக்கிழமை இலக்கானார். காயங்களுக்கு உள்ளாகி மயங்கி கிடந்த...

வாள்வெட்டு: மூவருக்கு மறியல்

ஆவரங்கால், நவோதய வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், கைதான சந்தேக நபர்கள் மூவரை, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன், ஞாயிற்றுக்கிழமை (29) உத்தரவிட்டார். இந்தச் சம்பவத்துடன், தொடர்புடைய குற்றச்சாட்டில் ஏற்கெனவே மூவர் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் மூவர், அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸாரால் சனிக்கிழமை (28)...

இலங்கையர்களின் இந்தியாவுக்கான ஊடுருவலுக்கு தடுப்பு

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் ஊடுருவுபவர்களைத் தடுப்பதற்காக, இந்தியப் பாதுகாப்புத் தரப்பினர், பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனையில் இருந்து இலங்கை தலைமன்னார் வரையிலான கடற்பகுதியில், ஏராளமான மணல் திட்டுகள் உள்ளன. இவற்றில் ஐந்து மணல் திட்டுகள், இந்திய கடல் எல்லைக்குள் அமைந்துள்ளன. ஏனையவை, இலங்கை கடல்...

வர்த்தக கண்காட்சியில் ஒரு கோடி லாபம்

யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியின் மூலமாக ஒரு கோடியே ஐந்து லட்சத்து ஒன்பது ஆயிரத்து இரண்டாயிரத்து இருநூற்று இருபது ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியின் நிதி திட்டமிடல் அதிகாரி தெரிவித்தார். பொருளாதார ரீதியான சந்தை வாய்ப்பினையும் மக்களின் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியினை மேன்படுத்துவதற்கான ஆரம்பிக்கப்பட்ட...

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேருந்து மோதி 15 மாடுகள் பலி!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புநோக்கிச் சென்ற பேருந்து மாடுகளை மோதித்தள்ளி கோர விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் 15 மாடுகள் அந்த இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், 25இற்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயமடைந்துள்ளன. இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக பேருந்தில் பயணித்த பயணியொருவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தின்போது பேருந்துச் சாரதி போதையில் இருந்ததாகவும் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வைத் தராது விட்டு விடுமோ?

“தென்னாபிரிக்காவில் அரசியல் ரீதியான ஒரு தீர்வு பெற்ற பின்னரே, உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது. மத்திய அரசாங்கம் அதைச் செய்து விட்டு, மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வைத் தராது விட்டு விடுமோ என்ற ஓர் ஐயம், எம்மைப் பீடித்தே இருக்கிறது” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மயூரபதி ஆலய நலன்புரிச் சங்கத்தால், கல்விசார்...
Loading posts...

All posts loaded

No more posts