Ad Widget

சாரதியை தாக்கிவிட்டு முச்சக்கரவண்டி அபகரிப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி பயணித்த மூவர், தொண்டமானாறு,வளலாய் பகுதியில் வைத்து சாரதியை தாக்கி, முச்சக்கரவண்டியினை அபகரித்துச் சென்றுள்ளதாக,அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பகுதியினை சேர்ந்தவரின் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்திய மூவர், தொண்டமானாறு பகுதிக்கு செல்ல வேண்டும் என கூறி வந்துள்ளனர்.

வளலாய் பகுதியில் முச்சக்கரவண்டி பயணித்துக் கொண்டிருந்த போது, யாருமற்ற இடத்தில் வைத்து, சாரதியை தாக்கியுள்ளதுடன் முச்சக்கரவண்டியுடன் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

அவ்வழியாக வந்த பொதுமகனின் உதவியுடன், அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு வந்த முச்சக்கரவண்டி சாரதி, முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை வளலாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts