Ad Widget

கேப்பாபுலவில் இராணுவத்தின் எச்சரிக்கை பெயர்ப் பலகையில் மீண்டும் மாற்றம்!

இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் உட்செல்லல் தடை தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என விமானப்படையினரால் அறிவித்தல் பலகை ஒன்று போடப்பட்டதால் மக்கள் குழப்பமடைந்தனர்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த காணியை மீண்டும் கையளிக்குமாறு இருபதாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை விமான படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்கள் காணியை விட்டு விமான படையினர உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமானப்படையால் கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த காணிகளின் ஒருபுற வேலி அடைக்கப்படாது காணப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் உட்செல்லல் தடை தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என அறிவித்தல் பலகை ஒன்று போடப்பட்டது

இதனை தொடர்ந்து இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வந்தவுடன் நேற்றைய தினம் இந்த பெயர் பலகை இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் உட்செல்லல் தடை என மாற்றப்பட்டது

இந்நிலையில் இன்று அந்த பெயர் பலகை இது விமானப்படை முகாம் உட்செல்லல் தடை என மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டு போடப்பட்டுள்ளது

Related Posts