Ad Widget

போத்தல்களால் தாக்கி பணம் பறிப்பு

சித்தன்கேணி பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் சென்ற குழுவினர் கடை உரிமையாளரை தாக்கி அச்சுறுத்தியதுடன் ஒரு தொகையான பணத்தையும் அபகரித்து சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

சித்தன்கேணி டச்சு வீதியில் அமைந்துள்ள பலசரக்கு கடையொன்றினுள் நேற்று இரவு 7.45 மணியளவில் 4 பேரடங்கிய குழுவினர் வாள், பொல்லு, கத்திகளுடன் நுழைந்து உரிமையாளரை அச்சுறுத்தி போத்தல்களால் தாக்கியதுடன் அவரிடம் இருந்த 45 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அபகரித்து சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கடை உரிமையாளரான கதிரவேலு முருகானந்தன் (வயது 45) என்பவரே காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸார் அவ்விடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

Related Posts