- Tuesday
- May 12th, 2026
கிழக்கு மாகாண எழுக தமிழ் பேரணியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கலந்துகொண்டுள்ளார். காலையில் ஆரம்பமான எழுக தமிழ் பேரணியில் காணாமல் போன உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளில் உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். அங்கீகரி அங்கீகரி எங்கள் தாயகத்தை அங்கீகரி, சுயநிர்ணயத்தை அங்கீகரி, அரசியல் கைதிகளை...
விடுதலைப்புலிகளின் ஓடுபாதையை புனரமைத்து அதற்கான பாதையொன்றை உருவாக்குவதற்காகவே தாம் மக்களின் காணிகளை அபகரித்து வைத்திருப்பதாக விமானப்படையினர் தன்னிடம் தெரிவித்ததாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 84ஆவது அமர்வு நேற்று நடைபெறுகையில், மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த இடத்தில் மீளக்குடியேற்றும் பிரேரணையை முன்மொழிந்தார். இதன்போது...
அரச காணிகளை இராணுவத்தினரின் தேவைக்குப் பெற்றுக்கொண்டு மக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பதாக சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களிடம் உறுதியளித்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் பிரதிநிதிகள் சிலர் நேற்றையதினம் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்திருந்தனர். இந்தச் சந்திப்பின்போது விரைவில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சிறீலங்காப்...
படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிப்பதற்காக தொடர்ந்து போராடிவரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தெற்கில் தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக தென்னிலங்கை சிவில் சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இன்றுடன் 11ஆவது நாளாகவும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் இம்மக்களை தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த தேசிய மீனவர் இயக்கம், பங்குத் தந்தையர்கள், அருட்சகோதரிகள்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புத் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, நேற்று (09) அறிவித்தார். நாடாளுமன்றம், சபாநாயகர் தலைமையில் நேற்றுக்காலை 10:30 க்கு கூடியது. அதன் பின்னர் விடுத்த சபாநாயகர் அறிவிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின்...
“தென்னிந்த திரைப்படங்களின் தூண்டுதலால், கத்தி மற்றும் வாள்களால் வெட்டிக்கொள்ளும் சம்பிரதாயம் யாழ்ப்பாணத்திலும் நடைமுறையில் உள்ளது. இந்த வாள் கலாசாரத்தை முற்றாக ஒழிக்கவேண்டுமாயின், சட்டத்தின் ஊடாக ஆகக்கூடிய அதியுச்ச தண்டனையை வழங்கவேண்டும்” என்று, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் நீதிபதி எம். இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். அதேபோல, இந்தச் சமூக விரோத செயற்பாடுகள், நீதிமன்றத் தண்டனைகளை சவாலுக்கு உட்படுத்தும் வகையிலேயே...
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் 15ம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, 15ம் திகதிக்கு பின்னர் முன்வைக்கப்படும் விண்ணப்பங்கள் எந்தவொரு காரணத்திற்காகவும் ஏற்கப்பட மாட்டாது என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனவரி 23ம் திகதி உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை...
யாழ்.மாவட்டத்தில் மறைமுகமாக 1600 ஏக்கர் காணியை அபகரிப்பதற்கு சதி திட்டம் தீட்டப்படுகின்றதாக வடமாகாணசபையின் 84 ம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாகாணசபையின் 84ம் அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,
முதலமைச்சர் இந்த விடயத்தைக் கவனத்தில் எடுக்க...
யாழில் வேலைவாய்ப்பு இன்றி உள்ள இளைஞர் யுவதிகளுக்கு ஹோட்டல்களில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு யாழ்.மாவட்ட சுற்றுலாத்துறை ஒன்றியத்தினர் தீர்மானித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே யாழ். மாவட்ட சுற்றுலாத்துறை ஒன்றியத்தினர் இவ்வாறு தெரிவித்தனர். யாழ். மாவட்டத்தில் சுற்றுலா மற்றும் ஹோட்டல் பயிற்சி நெறிகளை முடித்த 182 மாணவர்களில் 160 பேர் யாழ். மாவட்டத்தில்...
இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த யாழ்தேவியில் மோதுண்டு இராணுவச் சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை அரியாலை இராணுவமுகாமுக்கு வாகனத்தில் சென்றுகொண்டிருந்த குறித்த இராணுவத்தினர் புகையிரதக் கடவையில் உள்ள சிக்னலைக் கவனிக்காது பாதையைக் கடக்க முற்பட்டபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் ஒருவர் அதேNயிடத்தில் பலியாகியுள்ளதுடன், இன்னொரு இராணுவச் சிப்பாய்...
படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கமாறு கேப்பாப்புலவு மக்கள் இன்று பத்தாவது நாளாக போராட்டம் நடாத்திவரும் நிலையிலும், அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும், தமது காணிகளை மீட்பதற்காகவும் புதுக்குடியிருப்பில் இன்று ஆறாவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இம்மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு மட்டங்களிலிருந்தும் ஆதரவு பெருகி வரும் நிலையில், இன்று திடீரென முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த...
கேப்பாப்புலவில் தமது காணிகளை மீட்கப் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மக்களால் நீர்கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் ஆக்கிரமித்துவைத்துள்ள தமது காணிகளை மீட்பதற்காக கடந்த பத்து நாட்களாக கேப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நீர்கொழும்பில் சிங்கள மக்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சாரதிகள், நடத்துனர்கள், பணியாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் கண்டன பேரணி ஒன்றை இன்றைய தினம் யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பித்தனர். இவ் கண்டன ஆர்ப்பாட்டமானது யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து யாழ் ஆஸ்பத்திரி வீதியூடாக யாழ் மாவட்ட செயலகம் மற்றும் கைதடியில் உள்ள வடமாகாண சபைக்கு...
யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்தில் சந்தேகநபர்களான ஐந்து பொலிஸாரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற யாழ். பல்கலைகழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்தில் யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஜந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள்...
சயிடம் நிறுவனம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்கவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதேவேளை, சயிடம் நிறுவனத்தால் வைத்திய பீட மாணவர்கள் எவருக்கும் அநீதி இழைக்கப்பட இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று அக்கரபத்தணை - ஊட்டுவில் பெங்கட்டன் பிரிவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...
நாட்டில் மீண்டும் நிலவும் குளிர் காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடர்ந்து நிலவக்கூடும் என எதிர்ப்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.காற்று படிவங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் இந்த குளிர் காலநிலைக்கு காரணமாகியுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் எதிர்வரும் 13ம் திகதியின் பின்னர் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என அவர்...
படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், விமானப்படையினர் பயணிக்கும் வீதியை மறித்து மக்கள் தமது போராட்டத்தை நடத்திவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பிரதேசத்திற்கு இன்று காலை திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், கரைத்துரைப்பற்று...
முல்லைத்தீவு, மூங்கிலாறுப் பகுதியிலில் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றின் வீட்டுக்கு, விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் குடும்ப உறுப்பினர்கள், அருகிலுள்ள அவர்களின் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவுநேரத்தில் தங்குவதாகவும், சம்பவ தினமான, திங்கட்கிழமை இரவும், உறவினர் வீட்டுக்குச் சென்றபோது, இவர்களின் வீட்டுக்கு, இனந்தெரியாதோர் தீ வைத்துள்ளதாக...
யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 207 சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கபெற்றதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் நந்தன் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் யாழ். மாவட்டத்தில் ஐனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை 207 சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் பாடசாலைக்கு செல்லாத...
ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் 7 மாதக் கர்ப்பிணி, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும், இன்று (08) அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர். ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்ற கர்ப்பிணி, கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டார். இவருக்கு நான்கு வயதில் மகனொருவனும்...
Loading posts...
All posts loaded
No more posts
