Ad Widget

பெண் தலைமைத்துவக் குடும்பத்தின் வீட்டுக்கு விசமிகளால் தீ வைப்பு

முல்லைத்தீவு, மூங்கிலாறுப் பகுதியிலில் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றின் வீட்டுக்கு, விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் குடும்ப உறுப்பினர்கள், அருகிலுள்ள அவர்களின் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவுநேரத்தில் தங்குவதாகவும், சம்பவ தினமான, திங்கட்கிழமை இரவும், உறவினர் வீட்டுக்குச் சென்றபோது, இவர்களின் வீட்டுக்கு, இனந்தெரியாதோர் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வீடு, முற்றாக எரிந்து நாசாமாகியுள்ளதாகவும், வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம் அழிவை நேரில் செனறு பார்வையிட்டதாகவும், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு, தெரிவித்தார்.

இந்த நிலையில், குடும்ப உறுப்பினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளனர்.

Related Posts