Ad Widget

கேப்பாப்புலவு போராட்டத்தையடுத்து முல்லைத்தீவு மாவட்ட இராணுவமுகாம்கள் பலப்படுத்தல்!

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கமாறு கேப்பாப்புலவு மக்கள் இன்று பத்தாவது நாளாக போராட்டம் நடாத்திவரும் நிலையிலும், அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும், தமது காணிகளை மீட்பதற்காகவும் புதுக்குடியிருப்பில் இன்று ஆறாவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் இம்மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு மட்டங்களிலிருந்தும் ஆதரவு பெருகி வரும் நிலையில், இன்று திடீரென முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த இராணுவ முகாம்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இராணுவ முகாம்களின் வாயில்களுக்கு முட்கம்பிகள் பொருத்தப்படுவதுடன், முகாம் வாயில்களில் அதிகளவான இராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளை சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்திக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts