- Tuesday
- May 12th, 2026
வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வண்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தில் மாணவியின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களுக்குமான பிணை வழங்க...
இலங்கையில் முதல்முறைாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட ஒழுங்கு உள்ளிட்ட சட்டத் தொகுதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த சட்டத் தொகுதி வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் நேற்று முதல் இணைந்து கொண்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை எட்டாவது நாளாக முன்னெடுதிருந்த நிலையில் மாணவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்ட இடத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று ஒன்பதாவது நாளாக கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த காணிகளை விடுவிக்குமாறுகோரி அகிம்சை வழியில் தொடர்ந்து போராடி வருகின்றனர்....
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாம் மூடப்பட்ட போதிலும், 97 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முன்வரவில்லையென்றும், முகாம் காணப்பட்ட இடத்தின் அருகிலேயே அவர்கள் தொடர்ந்தும் வாழ்ந்து வருவதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பூந்தோட்டம் நலன்புரி முகாம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்...
வடக்கிலுள்ள ராணுவத்தை வெளியேற்றும் நோக்குடன் அரசியல் பின்புலத்துடன் நடத்தப்படும் போராட்டமே கேப்பாப்பிலவு போராட்டம் எனத் தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியராரச்சி, குறித்த போராட்டங்களுக்கு அஞ்சி காணிகளை விடுவிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார். ராணுவம் மற்றும் விமானப்படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் இன்றுடன்...
கடந்த சில மாதங்களாக வவுனியாவில், புலனாய்வுப் பிரிவினர் என, தங்களை அடையாளப்படுத்தி கொள்ளையில் ஈடுபட்ட மூவரை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வாரிக்குட்டியூர், செட்டிக்குளம், முதலியார்குளம் போன்ற பகுதிகளில், தங்களை புலனாய்வு பிரிவினர் என அடையாளம் காட்டி வீட்டை பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்து அதன் பின்னர் கத்தியினை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்....
தமது காணிகளைப் பெறுவதற்காக போராடிக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் சில சிங்கள மக்களும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சட்டத்தரணி சம்பத் புஸ்பகுமார, மனித உரிமைச் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ ஆகியோர் கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு தமது முழுமையான...
யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகவியலாளர்கள் இணைந்து ஊடகவியலாளர்களுக்கான அமைப்பொன்றை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதனை முன்னிட்டு நேற்றையதினம் யாழ். பொதுநூலகத்தில் ஒன்றுகூடிய ஊடகவியலாளர்கள் மாவட்டத்தின் அனைத்து ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைத்து செயற்படுவதற்கான தேவை குறித்து கலந்துரையாடினர். இதன்படி சகல ஊடகவியலாளர்களின் நலன்சார்ந்து இயங்கும் ஊடகவியல் அமைப்பொன்று தேவை என்பது ஏகமனதாக கருதப்பட்டதன் காரணமாக அமைப்பை ஏற்படுத்தும் விதமாக அமைப்பிற்கான நிர்வாகசபை...
தான் இலாபம் உழைக்க நினைத்திருந்தால் வைத்திய நிறுவனத்தை அல்ல கெசினோ நிறுவனத்தையே ஆரம்பித்திருப்பேன் என, சயிடம் நிறுவனத்தின் தலைவர் நெவில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும், சயிடம் நிறுவனத்தை ஒருபோதும் மூடும் எண்ணம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இதேவேளை, சயிடம்...
மாலபே சயிடம் தனியார் மருத்துவக் கல்லூரியை தடைசெய்யக் கோரி அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மருத்துவபீட மாணவர் ஒன்றிய குழு ஆகியன இணைந்து யாழ். நகரில் நேற்று போராட்டம் ஒன்றை நடத்தினர். இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உருவபொம்மையும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
கோப்பாபுலவு பிலக்குடியிருப்பிலுள்ள காணிகளை மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமது பெற்றோர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லாது, பெற்றோர்களுடன் இணைந்து தாமும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். ஸ்ரீலங்கா விமானப்...
தங்களுடனான யுத்தத்தின் போது கால்களை இழந்து சிறப்புத் தேவையுடையவர்களாக இருக்கின்ற முன்னாள் போராளிகளுக்கு இலங்கை இராணுவத்தினர் கால்களை வழங்கியுள்ளது. இலங்கை ராணுவத்தினருடனான யுத்தத்தின் போது தங்களது கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கும், மற்றும் யுத்த காலத்தில் கால்களை இழந்த பொது மக்களுக்கும் செயற்கை கால்களை ராணுவம் வழங்கியுள்ளது. கிளிநொச்சியில் இன்று (07) ஒத்துழைப்பு மத்திய நிலையத்தில்...
அண்மையில் யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஊறணி பிரதேசத்தின் இறங்குதுறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 500 மீற்றர் நிலப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்த போதிலும் குறித்த நிலப்பகுதியை மக்களிடம் ஒப்படைக்காது 500 மீற்றர் கடற்பகுதியை மாத்திரமே இராணுவம் மக்களிடம் ஒப்படைத்துள்ளதாக வலிகாமம் வடக்கின் மீள்குடியேற்றச் சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். தேசிய...
2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் உறுதியளித்தவாறு வேதன உயர்வு வழங்கப்படவில்லையென தெரிவித்து, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடுதழுவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கான சுற்றுநிரூபத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதுவரை வெளியிடவில்லையென கல்விசாரா ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்புத்...
இலங்கையில் ஆண்டு தோறும் சுமார் 2000 தொழு நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 1850 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணத்திலே ( 43 சத வீதம் ) கூடுதலான தொழு நோயாளர்கள் காணப்படுகின்றனர். அடுத்த படியாக தென் மாகாணத்தில்...
படையினர் வசமுள்ள தமது காணிகளை நாளை காலை 8 மணிக்கு முன்னதாக விடுவிக்காவிட்டால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளார். தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி அம் மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 8ஆவது நாளை எட்டியுள்ளபோதும் அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு சாதமான...
விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன் உள்ளிட்ட குழுவினரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், நெடியவனை சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே அரசாங்கம் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நோர்வேயில் விடுதலைப் புலிகளின் தலைவராக நெடியவன் செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்படுவதோடு, புலிகள்...
யாழ்ப்பாணம் வேலனை பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வேலனை அராலி சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேலனையில் இருந்து ஊர்காவற்றுறை பிரதான வீதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும்...
யாழ்ப்பாணத்தில் தேங்காய்க்குத் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் மிகப் பெரிய சந்தையான திருநெல்வேலிச் சந்தையில் வழமையாக தேங்காய் குவியலாகக் காணப்படும். ஆனால் நேற்று தேங்காயின்றி சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது. இது தொடர்பாக வியாபாரிகளிடம் வினவியபோது, கடந்த சில தினங்களாக சந்தைக்கு தேங்காய் வருவது சடுதியாகக் குறைந்துள்ளது. யாழ். குடாநாட்டில் அதிகமாகத் தேங்காய் விளையும் கொடிகாமம்,...
எதிர்வரும் மாதம் 11, 12 ஆம் நாட்களில் நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் பூர்வாங்க எற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகப்பட்டுள்ளதென மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உறையாற்றும்போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டுகளில் 4,000 ஆயிரம் பக்தர்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
