Ad Widget

யாழில் ஊடகவியலாளர்களிற்கான புதிய அமைப்பு உருவாக்கம்!

யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகவியலாளர்கள் இணைந்து ஊடகவியலாளர்களுக்கான அமைப்பொன்றை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இதனை முன்னிட்டு நேற்றையதினம் யாழ். பொதுநூலகத்தில் ஒன்றுகூடிய ஊடகவியலாளர்கள் மாவட்டத்தின் அனைத்து ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைத்து செயற்படுவதற்கான தேவை குறித்து கலந்துரையாடினர்.

இதன்படி சகல ஊடகவியலாளர்களின் நலன்சார்ந்து இயங்கும் ஊடகவியல் அமைப்பொன்று தேவை என்பது ஏகமனதாக கருதப்பட்டதன் காரணமாக அமைப்பை ஏற்படுத்தும் விதமாக அமைப்பிற்கான நிர்வாகசபை நேற்றையதினம் தெரிவுசெய்யப்பட்டது.

யாழ். மாவட்டத்திற்குட்பட்ட சகல ஊடகவியலாளர்களின் நலன்சார்ந்து, எதிர்காலத்தில் இவ் அமைப்பு செயற்படவுள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதுடன் நிர்வாகத்தின் பெயர் உள்ளிட்ட அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

Related Posts