Ad Widget

புலனாய்வுப் பிரிவினராக நடித்த மூவர் கைது

கடந்த சில மாதங்களாக வவுனியாவில், புலனாய்வுப் பிரிவினர் என, தங்களை அடையாளப்படுத்தி கொள்ளையில் ஈடுபட்ட மூவரை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாரிக்குட்டியூர், செட்டிக்குளம், முதலியார்குளம் போன்ற பகுதிகளில், தங்களை புலனாய்வு பிரிவினர் என அடையாளம் காட்டி வீட்டை பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்து அதன் பின்னர் கத்தியினை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக செட்டிக்குளம், பூவரசங்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் வீட்டு உரிமையாளர்கள் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட செட்டிக்குளம் பொலிஸார், மூன்று சந்தேகநபர்களை வவுனியாவில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

இவர்கள், 38, 22, 45 ஆகிய வயதுடையவர்கள் எனவும், இவர்களிடமிருந்து புலனாய்வு பிரிவினரின் தொப்பி ஒன்று, கத்தி ஒன்று, தங்க நகைகள், கறுப்புச் சட்டை ஒன்று, தொலைபேசி மூன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரை ரூபா 15 இலட்சத்து 35 ஆயிரம் களவாடப்பட்டதாகவும், ஜந்து வீட்டில் தாங்கள் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகநபர் ஒத்துக்கொண்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts