- Tuesday
- May 12th, 2026
இளவாலைப் பகுதியில் மாணவி ஒருவர் மீது அசிட் வீசி அவரை கொலை செய்த வழக்கில் மாணவியின் தாயின் சாட்சியத்தை தொடர்ந்து மேலதிக சாட்சிகளிடம் விசாரணை மேற் கொள்ளவதற்காக குறித்த வழக்கை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். மேற் குறித்த வழக்கு விசாரணைகள் 6 வருடங்களுக்கு பின்னர் நேற்று...
வடக்கிற்கு சென்றுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான தூதுக்குழுவின் தூதுவர் டுங்–லாய் மார்க் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. வடக்கு முதல்வரின் காரியாலயத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில், வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதிவரை வடக்கில் தங்கியிருக்கவுள்ள குறித்த...
டுபாயில் இலங்கையை சேர்ந்த ஆறு பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆறு இலங்கையர்களும் 26 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என அந்த நாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன. குறித்த இலங்கையர்கள் வீடுகளை உடைத்து தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தல், நபர்கள் மற்றும்...
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கான விஷேட பண்ட வரியை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 150 ரூபாவில் இருந்து 130 ரூபாவாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொப்பரா மற்றும் பாம் எண்ணெய் ஆகியனவும் 130 ரூபாவில் இருந்து 110 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் பல கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மின் கட்டணத்திற்கான சிட்டைகள் வழங்கப்பட்டவில்லை. ஆனால் பல கிராமங்களுக்குரிய நூற்றுக்கணக்கான மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடக்கின்றன. கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் பொறிக்கடவை சந்தி தொடக்கம் குடமுறுட்டி பாலம் வரையான பகுதிகளில் இவ்வாறு கிளிநொச்சி மின்சார சபையின்...
கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கும், அதன் வைத்தியர்கள் சிலருக்கும் எதிரான 100 மில்லியன் ரூபா அபராதம் கேட்டு களனிப் பிரதேச இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று (14) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தனது இரண்டாவது பிள்ளையின் பிரசவத்தின் பின்னர் தனது வயிற்றில் பஞ்சுப் பொதியொன்றை தவறுதலாக வைத்து தையல் போட்டுள்ளதாக...
வடக்கு – கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி என்பன அடையமுடியாத காரியமல்ல எனத் தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆனந்த சங்கரி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் பேச்சுக்களிலும் அறிக்கைகளிலும் நடவடிக்கைகளிலும் ஏற்பட்ட சந்தேகமே அதனை எட்டமுடியாதிருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் தரப்பினர் குறித்து சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகம் முற்றுமுழுதாக நீக்கப்படும் வரை...
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் கர்ப்பினி பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சிகளது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சாட்சியப் பதிவுகளானது சாட்சிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு நீதிவானது பிரத்தியேக அறையில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24 ஆம் திகதி ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த ஏழு மாத கர்ப்பினி பெண்ணொருவர்...
நெருக்கடிக்கு தீர்வுகாணும் வரை மாணவர்களை சேர்ப்பது நிறுத்தமுடியாது என்று மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தலைவரான மருத்துவர் நெவில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தீர்வு கிடைக்கும்வரை 6 மாதங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதை தற்காலிகமாக நிறுத்தும்படி உயர்கல்வி அமைச்சு விடுத்த வேண்டுகோளை மருத்துவர் நெவில் பெர்ணான்டோ நிராகரித்துள்ளார். சிறந்த மருத்துவக் கற்கைகளுக்காக தமது பல்கலைக்கழகத்தில் அதிகூடிய சம்பளத்திற்கு விரிவுரையாளர்கள்...
உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று எதிரணியிலுள்ள சில தரப்பினர் மற்றும் பேரினவாத அமைப்புக்களும் வலியுறுத்திவரும் நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக பிரசாரம் ஒன்றை முன்னெடுப்பது...
அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை நாடு திரும்புமாறு சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கான்பராவில் அவுஸ்ரேலியப் பிரதமர் ரேன்புல்லைச் சந்தித்தபின்னர் அவருடன் நின்று இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதன்போது ‘அவுஸ்ரேலியாவுக்குத் தப்பிச் செல்வதற்காக இலங்கை நாட்டவர்கள் சட்டத்தை...
இலங்கை அரசியல்வாதியொருவர் காதலர் தினத்தை முன்னிட்டு 53கிலோ ரோஜாமலர்கள் 2000 ஏனைய மலர்களைக் கொள்வனவு செய்ததையடுத்து, இம்மலர்கள் அனைத்தும் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து எரித்து அழிக்கப்பட்டுள்ளன. காதலர் தினத்தை முன்னிட்டு தாய்லாந்திலிருந்தும், இந்தியாவிலிருந்தும் இம்மலர்கள் பொதிகளில் அடைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமையன்று கட்டுநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்தன. இவற்றை அரசியல்வாதியொருவரே கொள்வனவு செய்துள்ளார் என விமானநிலைய அதிகாரிகள் சந்தேகம்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவுஸ்திரேலிய கீலோங்கில் உள்ள டேய்கின பல்கலைக்கழகம் இன்று கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் நேற்றிரவு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரை சென்றடைந்தார். வன்முறை, முரண்பாடுகளில் இருந்து நிலையான ஜனநாயகத்தை நோக்கி இலங்கையை கொண்டு செல்லும், பிரதமரின் முயற்சிகளை கௌரவிக்கும் வகையிலேயே கௌரவ...
தனது தாயின் மடியிலிருந்த பிள்ளையொன்று, வைத்தியரை, இரண்டு முறை உதைத்ததால் ஆத்திரமடைந்த வைத்தியர், அக்குழந்தையை எட்டி உதைத்ததுடன், செருப்பில் அடித்த சம்பவமொன்று மொறட்டுவை பகுதியில் இடம்பெற்றுள்ளது. மொறட்டுவை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலையமொன்றை நடத்திச் செல்கின்ற வைத்தியரே இவ்வாறு மிகமோசமான முறையில் நடந்துகொண்டுள்ளார் என்று, மொறட்டுவை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...
யுத்தத்தின்போது அங்கவீனமுற்ற ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய்கள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலகத்தை முற்றுகையிட்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வருடம் இடம்பெற்ற இவ்வாறான போராட்டம் பெரும் களேபரத்துடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் முற்றுகைப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். கடந்த வருடம் நவம்பர் 07ஆம் திகதி இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட முற்றுகைப் போராட்டம் பாரிய ஆர்ப்பாட்டமான...
முல்லைத்தீவு – கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பில் விமானப்படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழியை, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக வழங்கியதை ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், காணி விரைவில் விடுவிக்கப்படும் என கூறியமை தொடர்பான தகவலை, கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் நேரில் சென்று மாவட்ட அரசாங்க...
இலங்கை இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றவர்களில் சுமார் 550 பேரை ஒரே நாளில் கைது செய்துள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தை தொடர்ந்து இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றவர்கள் 550 பேர், ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர். இறுதி யுத்தத்தில் பங்குபற்றிய இராணுவத்தினரில் சுமார் 43000 பேர் தப்பிச் சென்றிருந்ததோடு, அவர்களுக்கான...
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகளான மொத்தம் 9 ஏக்கரையும் படையினரின் பயன்பாட்டிற்கே வழங்குமாறு இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் மீன்டும் கோரப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பரவிப்பாஞ்சான் கிராமத்தின் பெரும் பகுதியை இராணுவத்தினர் ஆக்கிரமித்திருந்தனர். இதற்குள் மக்களின் நிரந்தர உறுதிக்காணிகள் பலவும் அடங்கியிருந்தன. இவற்றினை விடுவிக்குமாறு கோருக்கை...
வாய் திறந்தால் பொய் சொல்பவர் தான் சுமந்திரன். இவ்வாறு பொய் சொல்லிச் சொல்லியே சுமந்திரன் தத்தளித்துக் கொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மணற்தறை வீதியிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்திற் நேற்று மாலை ஊடகவியியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது கேப்பாபபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...
தனக்கு வழங்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அசௌகரியமான சூழலை ஏற்படுத்தி உள்ளது எனவும், மக்களுடன் சுதந்திரமாக பேச முடியவில்லை எனவும் , இந்த பாதுகாப்பை தான் விரும்பவில்லை எனவும் , ஆனாலும் தற்போது பாதுகாப்பு அத்தியாவசியமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,...
Loading posts...
All posts loaded
No more posts
