Ad Widget

கர்ப்பினி பெண் படுகொலை: சாட்சியங்களின் வாக்குமூலங்கள் பதிவு

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் கர்ப்பினி பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சிகளது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சாட்சியப் பதிவுகளானது சாட்சிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு நீதிவானது பிரத்தியேக அறையில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 24 ஆம் திகதி ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த ஏழு மாத கர்ப்பினி பெண்ணொருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலைச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரனை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

நேற்றயதினம் குறித்த வழக்கு விசாரனையானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



இதன்போது குறித்த படுகொலை சம்பவம் தொடர்பாக சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

Related Posts