- Tuesday
- May 12th, 2026
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின் சமூகத்துடன் இணைந்துள்ள முன்னாள் பெண் புலி உறுப்பினருக்கு இராணுவத்தின் மகளீர் படையனியால் கணிணி தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மகேஸ் சேனாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய மயிலிட்டியில் அமைந்துள்ள 7வது மகளீர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கீதிகா ரங்கோட்டே இப்பொருட்களை வழங்கி வைத்தார். புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன்...
ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் கோரவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறு கால அவகாசம் வழங்கப்படுமாக இருந்தால் உறுதிமொழிகளை நிறைவேற்றும் செயற்பாடுகளை ஐ.நா. மேற்பார்வை செய்யும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட...
பாதிக்கப்பட்டோரையும் சாட்சிகளையும் பாதுகாக்கவேண்டிய தேசிய பாதுகாப்பு அதிகார சபையில், ஐ.நா. அறிக்கையொன்றில் சித்திரவதை தொடர்பில் குற்றமிழைத்தவர்களாக பெயரிடப்பட்டுள்ள இருவர் நியமிக்கப்பட்டிருப்பதானது குற்றமிழைத்தோரை பாதுகாப்பதாக அமைந்துள்ளதென உண்மை மற்றும் நீதி பொறிமுறைக்கான சர்வதேச நீதித் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா குற்றஞ்சாட்டியுள்ளார். ‘ஆடுகளின் காவலுக்கு ஓநாயை வைத்தல்’ எனும் தலைப்பில் குறித்த அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள...
கடும் மழைக்கு மத்தியிலும் முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணி மீட்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைக்கு தீர்வுகள் எதுவும் வழங்கப்படாத நிலையில், இன்று 15 ஆவது நாளாகவும் அம் மக்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர். விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட காணிகளை தம்மிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளளது....
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள அம்பகாமத்தை அண்டிய பகுதிகளில் நடமாடும் புலிகளினால் இதுவரை 14 மாடுகளை பிடித்துச் சென்று விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் குறித்த பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுடிசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பகாம் மற்றும் மம்மில் பிரதேசங்களில் புலிகளினால்...
சிறுப்பிட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இராணுவத்தினரில் 9 பேரின் விளக்கமறியல் யாழ். நீதவான் நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதனுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரை அச்சுவேலி காவல்துறையினர் கைது செய்தனர். எனினும் 1998 ஆம் ஆண்டு நீதவான் நீதிமன்றம் குறித்த...
யாழ். ஆரியகுளத்து நீர் சிவப்பு நிறமாக மாற்றமடைந்தமை ஒரு முக்கிய பிரச்சினையாக இல்லை எனவும் அவ்வாறு முக்கிய பிரச்சினையாக இருந்தால் உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். ஆரியகுளம் நீர் சிவப்பாக மாறியமை தொடர்பாக எங்களுக்கு எந்தவிதமான...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், யாழ். மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு அடுத்ததாக, உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ளாதாக, யாழ். போதனா வைத்தியசாலையின் உயர் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக, உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட தாவடி பகுதியிலேயே டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து...
தமது காணிகளிலுள்ள அடையாளங்களை இராணுவத்தினர் அழிப்பதாக, பிலவுக்குடியிருப்பு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் விமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து, பிலவுக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமது அடையாளங்களை இராணுவத்தினரல் அழிப்பதாக குற்றம சுமத்தியுள்ள இம்மக்கள் அது குறித்து தெரிவிக்கையில், 'எமது காணிகளிலுள்ள பயன்தருமரங்களை இராணுவத்தினர் அழித்து...
கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு வழங்க மற்றும் உதவிகளை வழங்க செல்வோரை விமான படையினர் தமது அலைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து வருகின்றார்கள். அத்துடன் வருபவர்களின் வாகன இலக்கங்களையும் குறிப்பெடுத்து கொள்கின்றனர். கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனார். அப்பகுதி மக்களின்...
தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு, உரிய தீர்வு வழங்க வேண்டும் என கோரி, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு வடமாகாண சபையால் இன்று, கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேப்பாபுலவில் 524 ஏக்கர் தனியாருக்குரிய காணிகள் விடுவிக்கபட வேண்டும். அவற்றில் 243 ஏக்கர் காணி கடந்த ஜனவரி மாதம் 25 ஆம்...
நாட்டில் மணிக்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றருக்கு மேற்பட்ட வேகத்திலும், கடற்கரையோர பிரதேசங்களில் 60 கிலோமீற்றருக்கு மேற்பட்ட வேகத்திலும் கடுமையான காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் வறட்சிக் காலநிலையில் ஓரளவு மாற்றத்தை இன்று இரவிலிருந்து சில தினங்கள் எதிர்பார்க்கலாம் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது....
படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருடன் நடைபெற்ற சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மக்கள் இன்று முதல் 48 மணித்தியால சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பிரதேச செயலாளருடனான கலந்துரையாடலின்போது, தாம் இவ்விடயம் தொடர்பாக மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் மாவட்ட செயலாளரிடமிருந்து பதில் கிடைக்கவில்லையென்றும் பிரதேச செயலாளர்...
வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி கோரி, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். தூரப்பிரதேசங்களில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய தம்மை இடமாற்றுமாறு கோரி கடந்த மாதம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரனுடன்...
எழுக தமிழோடு இணைந்து கொள்வதற்கு பெண்கள் அமைப்புக்கள் துணிவோடு முன்வரவில்லை என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு எழுக தமிழ் நிகழ்வில் பெண்களுக்கு மேடையில் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் குற்றச்சாட்டுத் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 5பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா இன்று பிறப்பித்தார்.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 14ஆவது நாளை எட்டியுள்ளது. மக்களது காணிகளை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள விமானப் படைத்தளம் மற்றும் ராணுவ முகாமை அகற்றி தமது காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி இம் மக்கள் ஆரம்பித்த போராட்டம், இரவு...
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 31 இந்திய மீனவர்கள், தம்மை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் தங்கச்சிமடம், இராமேஸ்வரம், கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 31 மீனவர்களே இன்று (திங்கட்கிழமை) காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். கடந்த பல மாதங்களாக தாம் சிறைவைக்கப்பட்டுள்ளதால், குடும்பங்களை...
காணிப் பிரச்சினைகளில் தீர்வை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வடக்கு மாகாண சபையால் முடியாது என்றும் தீர்வை வழங்க வற்புறுத்தும் கடப்பாட்டையே ஆற்றும் வரையரை மாகாண சபைக்கு தற்போது உண்டென்றும் வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். கேப்பாபுலவு மக்களின் மண்மீட்புப் போராட்டத்தில் நேற்று கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர்...
இலங்கையர்களுக்கு வீசா இல்லாமல் அமெரிக்காவிற்கு செல்லாம் என வெளியான தகவல்களில் எந்தவித உண்மையில்லை என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான நிறைவேற்று உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என யு.எஸ்.ஏ ரெலிவிசன் என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக அதிகபட்சமாக 180 நாட்கள் இலங்கை பிரஜைகள்...
Loading posts...
All posts loaded
No more posts
