Ad Widget

காணாமல் போனோரின் உறவுகளை ஏமாற்றிய ஜனாதிபதி!

ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை முன்னிட்டு காணாமல் போனவர்களின் உறவினர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடபகுதியில் கைது செய்யப்பட்டு காணாமல் போனோர் பாதுகாவலர் சங்கத்தினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் உரிய பதிலை வழங்க வேண்டும் என கோரியே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம் கனகரத்தினம் விந்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காணாமல் போனவர்களின் உறவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாட முற்பட்ட போதிலும் ஜனாதிபதி அவர்களை சந்திக்காது சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வீதியில் அமர்ந்தவாறு தமிழ் அரசியல் வாதிகளை துாற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வீதியில் அமர்ந்தவாறும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Related Posts