யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் ‘அரச தலைவரிடம் தெரிவியுங்கள்’ முறைப்பாட்டு அலுவலகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற குறித்த திறப்பு விழாவில், அமைச்சர் துமிந்த திசாநாயக்க, வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.