- Wednesday
- May 13th, 2026
நாளை புதுடில்லியில் நடைபெறவுள்ள தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கில் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றவுள்ளார். NIA எனப்படும், இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரமைப்பு, இந்தியா பவுண்டேசன், ஹரியானா சுவர்ண உற்சவ் ஆகியன இணைந்து தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு-2017 என்ற கருத்தரங்கை ஒழுங்கு செய்துள்ளன. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தீவிரவாதம் என்ற தொனிப்பொருளில், இந்தக் கருத்தரங்கு நாளை...
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட 6 ஆவது சந்தேக நபருக்கு சர்வதேச பிடியாணை பிறப்பித்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, இன்று உத்தரவிட்டார். அத்துடன், சந்தேக நபர்கள் ஐவரின் விளக்கமறியலை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிப்பதாகவும் நீதவான் கூறினார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட சந்தேகத்தில்,...
பலாலி விமான நிலையத்திற்காக அரசினால் 1952 மற்றும் 1983 ஆகிய காலப்பகுதிகளில் அரசினால் சுவீகரிக்கப்பட்டிருந்த 956 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்களையும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவகர்களிடம் பதியுமாறும் கோரப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையம் மற்றும் இராணுவ முகாமிற்காக 1952 மற்றும் 1983ம் ஆண்டுகளில் அரசினால் சுவீகரிக்கப்பட்ட நிலங்களிற்கான நட்ட ஈடு இன்றுவரை அரசினால்...
தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண்கள் போராளிகளிகள் இன்று சமுகத்தினால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். யுத்ததிற்கு முன்னர் பெண் போராளிகளுக்கு காணப்பட்ட மரியாதை யுத்ததின் பின்னர் மழுங்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்றைய தினம் சர்வதேச...
போர்க் குற்றங்களில் இலங்கை இராணுவம் ஈடுபடவில்லை எனும் வாக்குமூலங்கள் அடங்கிய 200 பக்கங்களைக் கொண்ட அறிக்கை, இன்று (திங்கட்கிழமை) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் வைத்து மேற்படி அறிக்கை கையளிக்கப்படவுள்ளது. லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாநயக்க, ரியல் அட்மிரல் எச்.ஆர். அமரவீர, ரியல் அட்மிரல்...
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பதிவாளர், பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவித்துள்ளார். பல்கலைக்கழகச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறி, கலைப்பீட பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் ஆகியோரின் எழுத்துமூல மற்றும் வாய்மொழிமூலமாக வழங்கப்பட்ட பணிப்புரைகளை மீறியமை ஆகியவற்றுக்காக,...
“கீரிமலையில் அமைக்கப்பட்ட நல்லிணக்கபுர வீடமைப்புகளைப் போன்று, அதன் தெற்குப் பக்கத்தில் 225 வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். ‘நல்லிணக்கபுரத்தில் 33 மேலதிக வீடுகளைக் கட்டிக்கொடுத்திருக்கிறோம். 'அதனை, கடந்த 9ஆம் திகதி பயனாளர்களிடம் கையளித்தோம். அதேபோன்று, மாவன்கல்லடியில் 225 வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு,...
யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மற்றும் இராமநாதன் நுண்கலைத் துறை தவிர்ந்த ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் முறைகேடான நடவடிக்கையின் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். அதற்கமைய, விடுமுறை வழங்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....
கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன தெரிவித்தார். நேற்றையதினம் கச்சதீவில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே மேற்படி குறிப்பிட்டுள்ளார். மேலும் கடலில் ரோந்து செல்லும் கடற்படையினர் துப்பாக்கியைப் பயன்படுத்துவதாயின் அதற்காக கடற்படைத் தலைமையிடம் அனுமதி கோரப்பட வேண்டும். அவ்வாறான...
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று ஆறாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்க முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தாம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தபோதும், இதுவரை தமக்கு எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் தாம் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தமது போராட்டம் கவனிப்பாரற்று...
கேப்பாபுலவு சொந்த நிலத்தை பெற்றுக்கொள்வற்காக மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று பதின்மூன்றாவது நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை சாகும் வரையான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமது சொந்த நிலத்தை விடுவிக்குமாறு புலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்த போராட்டம் கடந்த முதலாம் திகதி முடிவுக்கு வந்தநிலையில் கேப்பாபுலவு பூர்வீக நிலத்தை கோரி மக்கள்...
தென்மராட்சியில் டெங்குத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்று சாவகச்சேரி சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். அண்மைக்காலமாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலை வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 9 நாள்களில் மட்டும் டெங்குத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டியிருந்தது. அதையடுத்து சுகாதாரப் பிரிவினரால் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த டெங்கு பரிசோதனையின் போது நுளம்பு...
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்றிரவு திடீரென மெழுகுவர்த்தி ஏற்றும் இடத்தில் தீப் பற்றியதில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மெழுகுதிரி ஏற்றும் இடத்தில் திடீரென தீப்பற்றியது. இதனால் சிறிது நேரம் அப்பகுதி புகைமூட்டமாக காணப்பட்டது. எனினும் தெய்வாதீனமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தமிழக மீனவர்கள் கச்ச தீவு திருவிழாவைப்...
கிளிநொச்சியில் நேற்று கடும் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். காலபோக நெற் செய்கையின் அறுவடை தற்போது முழுமையாக நிறைவு பெறாத நிலையில் கடும் மழையின் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்
வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு உட்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனை மாங்குளத்தில் அமையவுள்ளது. இதற்கான பணிமனைக் கட்டிடத்துக்கான அடிக்கல் மாங்குளத்தில் நாட்டப்பட்டுள்ளது. வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று முன்தினம் சனிக்கிழமை (11.03.2017) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். இரண்டு மாடிகளைக் கொண்டதாக அமையவுள்ள இக்கட்டிடத்தை...
வவுனியாவில் நடைபெற்று வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அவசர கலந்துரையாடலில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை. ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க ஆதரவு வழங்குவதா- இல்லையா, தற்போதைய மக்கள் போராட்டங்கள், தற்போதைய அரசியல் சூழ்நிலை, அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக கூட்டமைப்பின் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. இதில்...
வவுனியாவில் இன்று நடைபெறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்திற்கு வரும் போது நான் அப்பம் சாப்பிட்டு விட்டே வந்தேன் என கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார். கூட்டம் ஆரம்பமாக தயாரான நிலையில் மண்டபத்தில் அமர்ந்திருந்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், தனக்கு அருகில் இருந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற...
கல்வி அமைச்சர் மீது காசு விடையத்தில் ஒரு ரூபாய் கூட ஊழல் சொல்ல முடியாது. ஆனால் நிர்வாக ரீதியிலே பல பிரச்சினைகள் உள்ளது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்துள்ளார். கடந்த 09.03.2017 அன்று நடைபெற்ற மாகாணசபை அமர்வில் முன்வைக்கப்பட்ட கவனஈர்ப்பு ஒன்று தொடர்பில் தனது கருத்தினை முன்வைக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
சவுதி அரேபியாவில் இருந்த கடந்த 7ஆம் திகதி இலங்கைக்குத் திரும்பியவர், கொழும்பு கோட்டைப் பகுதியிலுள்ள விடுதியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். கதிரமலை மகேந்திரராஜா (வயது 34) எனும் இந்நபர், அரேபியாவில் இருந்த இலங்கைக்கு வந்துள்ளார். இதன்போது, விமான நிலையத்துக்குச் சென்ற மனைவியிடம் தனது பயணப் பொதிகளை வழங்கி, அவரை யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் உள்ள...
தமிழ் மக்களுக்கான சிறந்த தொரு அரசியல் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை எதிர்பார்த்திருந்த போதிலும் கூட்டமைப்பு தமது கடமைகளை சரிவர நிறைவேற்றவில்லையென முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கான கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றியிருந்தால் தனது தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர...
Loading posts...
All posts loaded
No more posts
