Ad Widget

மீண்டும் பரபரப்பாகும் அப்ப விவகாரம்: கூட்டமைப்பின் கூட்டத்திற்கு அப்பம் சாப்பிட்டுவிட்டு வந்த சம்மந்தன்

வவுனியாவில் இன்று நடைபெறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்திற்கு வரும் போது நான் அப்பம் சாப்பிட்டு விட்டே வந்தேன் என கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டம் ஆரம்பமாக தயாரான நிலையில் மண்டபத்தில் அமர்ந்திருந்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், தனக்கு அருகில் இருந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன் உரையாடினார்.

இதன்போது நான் அப்பம் சாப்பிட்டு விட்டே வந்தேன் என செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடம் தெரிவித்திருந்தார்.

இதேவேளை 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அப்போதைய ஜனாதிபதி மஹிந்தவுடன் இருந்த மைத்திரிபால சிறிசேன இறுதியாக அப்பம் சாப்பிட்டு விட்டே அங்கிருந்து சென்று தேர்தலில் மஹிந்தாவுக்கு எதிராக போட்டியிடுவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts