Ad Widget

புதுடில்லியில் நாளை ஆரம்பமாகவுள்ள தீவிரவாத எதிர்ப்பு கருத்தரங்கில் சம்பந்தன் உரை!

நாளை புதுடில்லியில் நடைபெறவுள்ள தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கில் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றவுள்ளார்.

NIA எனப்படும், இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரமைப்பு, இந்தியா பவுண்டேசன், ஹரியானா சுவர்ண உற்சவ் ஆகியன இணைந்து தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு-2017 என்ற கருத்தரங்கை ஒழுங்கு செய்துள்ளன.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தீவிரவாதம் என்ற தொனிப்பொருளில், இந்தக் கருத்தரங்கு நாளை ஆரம்பமாகி எதிர்வரும் 16ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.

இக்கருத்தரங்கில் அமெரிக்கா, சீனா உட்பட 30இற்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன.

இதில், சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ரணில் விக்கிரமசிங்க, சாலக ரத்நாயக்க, பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.

Related Posts