Ad Widget

சவுதியிலிருந்து திரும்பியவர் சடலமாக மீட்பு

சவுதி அரேபியாவில் இருந்த கடந்த 7ஆம் திகதி இலங்கைக்குத் திரும்பியவர், கொழும்பு கோட்டைப் பகுதியிலுள்ள விடுதியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கதிரமலை மகேந்திரராஜா (வயது 34) எனும் இந்நபர், அரேபியாவில் இருந்த இலங்கைக்கு வந்துள்ளார்.

இதன்போது, விமான நிலையத்துக்குச் சென்ற மனைவியிடம் தனது பயணப் பொதிகளை வழங்கி, அவரை யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் உள்ள வீட்டுக்குச் செல்லுமாறும் தனது பிறிதொரு பை விமான நிலையத்தில் உள்ளது எனவும் அதனை பெற்றுக்கொண்டு, தான் யாழ்ப்பாணத்துக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், மனைவி தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், குறித்த நபரின் சடலம், கொழும்பு கோட்டைப் பகுதியிலுள்ள விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என, கொடிகாமம் பொலிஸாருக்கு, கொழும்பு பொலிஸாரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts