கிளிநொச்சியில் நீடிக்கும் வரட்சிநிலை: பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் வரட்சிநிலை காரணமாக பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரதேச சபைகள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாகவும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கரைச்சிப்பிரதேச செயலர்பிரிவின் கீழ் உள்ள பொன்னகர் கோணாவில், மாலையாளபுரம், சாந்தபுரம், ஆகிய பகுதிகளிலும், பூநகரி பிரதேச...

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை முழுமையாக!

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை முழுமையாக இங்கே தரவிறக்கம் செய்யலாம் NPC_Inquiry_Report  
Ad Widget

யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் தொண்டமனாறு கடற்பரப்பில் வைத்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவினை காங்கேசன்துறை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் இக் கடத்தல் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று இரவு காங்கேசன்துறை கடற்படையினர் கடற்பரப்பிலும் கடற்கரையை அண்டிய பகுதிகளிலும் வழமையான ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது தொண்டமனாறு கடற்கரையை அண்டிய பகுதியில்...

யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், அவர்களை நினைவு கூறவும் வடக்கு,கிழக்கு மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக அஞ்சலி நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்த அருட்தந்தை எழில் ராஜேந்திரன் பல தடவைகள் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு...

பல அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைத்தார் வடக்கு முதல்வர்

வடக்கு முதல்வர் சி.வி.விக்ணேஸ்வரன் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு நகர், தண்நீரூற்று உள்ளிட்ட பகுதிகளில் பல அபிவிருத்தி திட்டங்களை மக்கள் பாவனைக்கு கையளித்துள்ளார். இதற்கிணங்க குறித்த பகுதிகளில் அமைக்கப்பட்ட நூல் நிலையம், பொதுச்சந்தைகள், குடி நீர்விநியோக திட்டம் உள்ளிட்டவைகளை வடமாகாண முதலமைச்சர் நேற்று(வெள்ளிக்கழமை) திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்கள் மாவட்ட அரச அதிபர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

நிவாரணங்களை தாங்கிய ரயில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட தென்பகுதி மக்களுக்கு உதவும் நோக்குடன் மனிதாபிமான ரயில் பயணம் இன்று (சனிக்கிழமை) காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து காலை ஆறு மணிக்கு பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்த விசேட ரயிலில் பொதிகளை ஏற்றுவதற்கான 5 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த ரயில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மதவாச்சி, அனுராதபுரம்,...

வடக்கில் 219 பட்டதாரிகளுக்கு நியமனம்

வடமாகாண பாடசாலைகளில் நிலவும் கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று (சனிக்கிழமை)யாழ்.இந்து கல்லூரியில் நடைபெற்றது. இதன்படி 219 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதில் பௌதீகவியல் பாடத்திற்கு 16 பட்டதாரிகளும், இரசாயனவியல் பாடத்திற்கு 11 பட்டதாரிகளும், உயிரியல் பாடத்திற்கு...

குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்ட அமைச்சர்களும், வாக்குமூலம் அளிக்க செல்லாத உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும்!

வடக்கு மாகாண சபையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பின்னர் அது தொடர்பாக வாக்கு மூலம் அளிக்க செல்லாத உறுப்பினர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். நேற்றயதினம்...

யாழ். பிரதி பொலிஸ்மா அதிபர் இடமாற்றம்

சேவையின் நிமித்தம் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய சஞ்ஜீவ தர்மரட்ன, கொழும்புக்கு இடமாற்றம் பெற்று செல்லவுள்ளார். கடந்த வருடம் ஜீலை மாதம் முதல், தற்போது வரையான காலப்பகுதி வரை, யாழ். மாவட்டத்தில் உள்ள 17 பொலிஸ் நிலையங்களின் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக சஞ்ஜீவ தர்மரட்ண கடமையாற்றியிருந்தார். இந்நிலையில், புதிய பிரதி பொலிஸ்மா...

அதிபரின் தண்டனையால் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சி நகரில் இயங்கி வருகின்ற பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் உயர்தர மாணவன் ஒருவருக்கு தண்டனை வழங்கியமையால் கை எலும்பில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த ஏழாம் திகதி குற்றச்சாட்டு ஒன்றின் பெயரில் குறித்த மாணவனை அலுவலகத்திற்கு அழைத்து தண்டனை வழங்கியுள்ளார். இதனால் கை எலும்பில் ஏற்பட்ட...

இலங்கையிலும் ஐ.எஸ். அச்சுறுத்தல் உள்ளது: சம்பிக்க ரணவக்க

இலங்கையிலும் ஐ.எஸ். அச்சுறுத்தல் உள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மேற்கத்தேய நாடுகளில் இடம்பெற்று வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று மேற்கு நாடுகளில் மோசமான வகையில் பயங்கரவாதம் பரவியுள்ளது. லண்டன், பிரான்ஸ், ஈரான், நாடுகளில் தொடர்ச்சியாக...

காங்கேசன்துறையில் போதைப் பொருள் மீட்பு!

காங்கேசன்துறைக் கடற்பரப்பில் வைத்து ஹெரோயின் போதைப் பொருட்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படையின் வட பிராந்தியத்திற்கான 41 வது பிரிவினர் மேற்கொண்ட கண்காணிப்பின்போது, 5.6 கிலோகிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கையை அவதானித்த கடத்தல்காரர்கள் தம்மால் கடத்தப்பட்ட பொதிகளைக் கடலில் வீசியுள்ளனதுடன் இவை, நீர் புகாதவண்ணம் நன்கு பொதி செய்யப்பட்ட...

வறட்சி தொடர்பில் விசேட கவனம் தேவை: இரா. சம்பந்தன்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி மக்களுக்கு அரசு உரிய நிவாரணங்களை வழங்கவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் தொடர்பில் ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்த கோரிக்கையை...

நாட்டின் பல பாகங்களுக்கு இன்று காற்றுடன் மழை பெய்யும்!

நாட்டின் பல பாகங்களுக்கும் இன்று (09) மழை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள பல பகுதிகளுக்கும் மழை எதிர்பார்ப்பதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை அதிகரிப்பு

தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். சீனியின் இறக்குமதி வரி பத்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டமையால், தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். புதிய விலை திருத்தத்திற்கு அமைய...

இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அடக்க இராணுவம்: ஜனாதிபதி

அரசாங்கத்திற்கும், சிறுபான்மை சமூகங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவோர் இராணுவத்தை கொண்டு அடக்கப்படுவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அனர்த்த நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் ஆகிய தொடர்பிலான கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நீடித்துவரும் இனவாத செயற்பாடுகளை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாது போனால், அதற்கு மாற்று நடவடிக்கையாக இராணுவம் ஈடுபடுத்தப்படும் என்றும்...

அரச, தனியார் பஸ் ஊழியர்களிடையே மோதல், 2 பேர் வைத்தியசாலையில்

வவுனியா தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இலங்கை அரச போக்குவரத்து சபை பஸ் ஊழியர்களுக்கும் இடையில் நேற்று(08) நண்பகல் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து நேர அட்டவணை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் இந்த மோதலுக்குக் காரணம் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னரும் இதேபோன்று மோதல் ஏற்பட்ட சம்பவங்கள் பல காணப்படுவதாகவும்...

திருமுருகன் காந்தியை விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்

குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டள்ள ஈழத் தமிழர்களின் ஆதரவாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ். நகரில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். பஸ் நிலையத்தின் முன்பாக நேற்று வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் போது, பாரத தேசத்திற்கு விடுதலை...

காங்கேசன்துறை மோசடி: கோட்டாபயவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை

காங்கேசன்துறை சீமெந்து ஆலையில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விரைவில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை சீமெந்து ஆலையின் இயந்திர சாதனங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பழைய இரும்பாக பல கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பிலேயே குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குறித்த மோசடி தொடர்பில் முன்னாள்...

சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

சிறுநீரக நோயாளிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி, இதுவரை 3 ஆயிரம் ரூபாவாக இருந்த மாதாந்த கொடுப்பனவுத் தொகையை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேருக்கு...
Loading posts...

All posts loaded

No more posts