வடமாகாண பாடசாலைகளில் நிலவும் கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று (சனிக்கிழமை)யாழ்.இந்து கல்லூரியில் நடைபெற்றது.
இதன்படி 219 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதில் பௌதீகவியல் பாடத்திற்கு 16 பட்டதாரிகளும், இரசாயனவியல் பாடத்திற்கு 11 பட்டதாரிகளும், உயிரியல் பாடத்திற்கு 13 பட்டதாரிகளும், இணைந்த கணிதம் பாடத்திற்கு 10 பட்டதாரிகளும், உயிரியல் தொழிநுட்பம் பாடத்திற்கு 15 பட்டதாரிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பொறியியல் தொழிநுட்பம் பாடத்திற்கு 12 பட்டதாரிகளுக் கும், தொழிநுட்பத்திற்கான விஞ்ஞானம் பாடத்திற்கு 2 பட்டதாரிகளுக்கும், விஞ்ஞான பாடத்திற்கு 95 பட்டதாரிகளுக்கும், கணித பாடத்திற்கு 45 பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, எதிர்க் கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் மாகாண சபை உறுப்பினர் இ.அர்னோல்ட் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.