Ad Widget

கிளிநொச்சியில் நீடிக்கும் வரட்சிநிலை: பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் வரட்சிநிலை காரணமாக பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச சபைகள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாகவும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கரைச்சிப்பிரதேச செயலர்பிரிவின் கீழ் உள்ள பொன்னகர் கோணாவில், மாலையாளபுரம், சாந்தபுரம், ஆகிய பகுதிகளிலும், பூநகரி பிரதேச செயலர் பிரிவில் பதினொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் கல்லாறு தட்டுவன்கொட்டி ஆகிய பகுதிகளிலும் வருடம் முழுவதும் குடிநீரத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இவ்வாண்டு நிலவும் வரட்சி காரணமா,க அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாக வரட்சி தணிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் எட்டு உழவு இயந்திர பவுசர்களும் குடிநீர்த் தாங்கிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும், இவை கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மாவட்;ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts