Ad Widget

காங்கேசன்துறையில் போதைப் பொருள் மீட்பு!

காங்கேசன்துறைக் கடற்பரப்பில் வைத்து ஹெரோயின் போதைப் பொருட்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கைக் கடற்படையின் வட பிராந்தியத்திற்கான 41 வது பிரிவினர் மேற்கொண்ட கண்காணிப்பின்போது, 5.6 கிலோகிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளன.

கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கையை அவதானித்த கடத்தல்காரர்கள் தம்மால் கடத்தப்பட்ட பொதிகளைக் கடலில் வீசியுள்ளனதுடன் இவை, நீர் புகாதவண்ணம் நன்கு பொதி செய்யப்பட்ட நிலையில் இருந்துள்ளன.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பொதிகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Related Posts