Ad Widget

தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை அதிகரிப்பு

தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

சீனியின் இறக்குமதி வரி பத்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டமையால், தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

புதிய விலை திருத்தத்திற்கு அமைய 15 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட தேநீர் 20 ரூபாவாகவும், முப்பத்தைந்து ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பால் தேநீர் நாற்பது ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் மேலும் தெரிவித்தார்.

Related Posts