- Friday
- May 15th, 2026
வடமாகாண பாடசாலைகளில் நிலவும் கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று (சனிக்கிழமை)யாழ்.இந்து கல்லூரியில் நடைபெற்றது. இதன்படி 219 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதில் பௌதீகவியல் பாடத்திற்கு 16 பட்டதாரிகளும், இரசாயனவியல் பாடத்திற்கு 11 பட்டதாரிகளும், உயிரியல் பாடத்திற்கு...
வடக்கு மாகாண சபையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பின்னர் அது தொடர்பாக வாக்கு மூலம் அளிக்க செல்லாத உறுப்பினர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். நேற்றயதினம்...
சேவையின் நிமித்தம் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய சஞ்ஜீவ தர்மரட்ன, கொழும்புக்கு இடமாற்றம் பெற்று செல்லவுள்ளார். கடந்த வருடம் ஜீலை மாதம் முதல், தற்போது வரையான காலப்பகுதி வரை, யாழ். மாவட்டத்தில் உள்ள 17 பொலிஸ் நிலையங்களின் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக சஞ்ஜீவ தர்மரட்ண கடமையாற்றியிருந்தார். இந்நிலையில், புதிய பிரதி பொலிஸ்மா...
கிளிநொச்சி நகரில் இயங்கி வருகின்ற பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் உயர்தர மாணவன் ஒருவருக்கு தண்டனை வழங்கியமையால் கை எலும்பில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த ஏழாம் திகதி குற்றச்சாட்டு ஒன்றின் பெயரில் குறித்த மாணவனை அலுவலகத்திற்கு அழைத்து தண்டனை வழங்கியுள்ளார். இதனால் கை எலும்பில் ஏற்பட்ட...
இலங்கையிலும் ஐ.எஸ். அச்சுறுத்தல் உள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மேற்கத்தேய நாடுகளில் இடம்பெற்று வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று மேற்கு நாடுகளில் மோசமான வகையில் பயங்கரவாதம் பரவியுள்ளது. லண்டன், பிரான்ஸ், ஈரான், நாடுகளில் தொடர்ச்சியாக...
காங்கேசன்துறைக் கடற்பரப்பில் வைத்து ஹெரோயின் போதைப் பொருட்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படையின் வட பிராந்தியத்திற்கான 41 வது பிரிவினர் மேற்கொண்ட கண்காணிப்பின்போது, 5.6 கிலோகிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கையை அவதானித்த கடத்தல்காரர்கள் தம்மால் கடத்தப்பட்ட பொதிகளைக் கடலில் வீசியுள்ளனதுடன் இவை, நீர் புகாதவண்ணம் நன்கு பொதி செய்யப்பட்ட...
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி மக்களுக்கு அரசு உரிய நிவாரணங்களை வழங்கவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் தொடர்பில் ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்த கோரிக்கையை...
நாட்டின் பல பாகங்களுக்கும் இன்று (09) மழை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள பல பகுதிகளுக்கும் மழை எதிர்பார்ப்பதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். சீனியின் இறக்குமதி வரி பத்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டமையால், தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். புதிய விலை திருத்தத்திற்கு அமைய...
அரசாங்கத்திற்கும், சிறுபான்மை சமூகங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவோர் இராணுவத்தை கொண்டு அடக்கப்படுவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அனர்த்த நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் ஆகிய தொடர்பிலான கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நீடித்துவரும் இனவாத செயற்பாடுகளை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாது போனால், அதற்கு மாற்று நடவடிக்கையாக இராணுவம் ஈடுபடுத்தப்படும் என்றும்...
வவுனியா தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இலங்கை அரச போக்குவரத்து சபை பஸ் ஊழியர்களுக்கும் இடையில் நேற்று(08) நண்பகல் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து நேர அட்டவணை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் இந்த மோதலுக்குக் காரணம் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னரும் இதேபோன்று மோதல் ஏற்பட்ட சம்பவங்கள் பல காணப்படுவதாகவும்...
குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டள்ள ஈழத் தமிழர்களின் ஆதரவாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ். நகரில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். பஸ் நிலையத்தின் முன்பாக நேற்று வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் போது, பாரத தேசத்திற்கு விடுதலை...
காங்கேசன்துறை சீமெந்து ஆலையில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விரைவில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை சீமெந்து ஆலையின் இயந்திர சாதனங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பழைய இரும்பாக பல கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பிலேயே குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குறித்த மோசடி தொடர்பில் முன்னாள்...
சிறுநீரக நோயாளிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி, இதுவரை 3 ஆயிரம் ரூபாவாக இருந்த மாதாந்த கொடுப்பனவுத் தொகையை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேருக்கு...
பாடசாலை பிள்ளைகளின் உடல் பருமனைக் குறைப்பதற்கு விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெறும் மரணங்களில் 59 வீதமான மரணங்கள் தெற்றா நோய்களினால் ஏற்படுகின்றது எனவும் மாரடைப்பு, உயர் குருதியழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களினால் அதிகளவில் மக்கள் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதியளவு உடற்பயிற்சி மேற்கொள்ளாமையே...
இலங்கையில் சுனாமி அல்லது சூறாவளி அனர்த்தம் எதுவும் கிடையாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் கடல் நீர் தரைப் பிரதேசத்திற்குள் பிரவேசித்த காரணத்தினால் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக சில தரப்பினர் பிரச்சாரம் செய்திருந்தனர். எனினும் இவ்வாறான எந்தவொரு ஆபத்து நிலைமைகளும்...
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடங்களில் பலவாறாக சித்தரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையில் இவ்வாறான நிலைமை தொடர்ந்தும் நீடிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, இன்று (புதன்கிழமை) முதலமைச்சரால் அவையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அவைத்தலைவர்...
கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்கட்சித் தலைவர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே! பலவிதமான குற்றச்சாட்டுக்கள் எமது அமைச்சர்களுக்கு எதிராகக் கிடைத்ததன் விளைவாக நாம் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தோம். அதில் இருவர் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஒருவர் இளைப்பாறிய இலங்கை நிர்வாக சேவையின் ஒரு சிரேஷ்ட அதிகாரியாவார். விதிமுறைக் குறிப்புக்கள் கொடுக்கப்பட்டு...
காங்கேசன்துறை சீமெந்து உற்பத்திசாலை இயந்திர சாதனங்கள் பழைய இரும்பாக விற்கப்பட்டமை குறித்து முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. பாரிய நிதிமோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணைகளுக்காக இன்றைய தினம் ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலயாகுமாறு தயா ரட்நாயக்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள்...
தேவை ஏற்பட்டால் கட்டார் வாழ் இலங்கையர்கள் மீள அழைக்கப்படுவர் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். கட்டார் வாழ் இலங்கையர்களுக்கு எவ்வித இடையூறுகளும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் தேவை ஏற்பட்டால் கட்டார் வாழ் இலங்கையர்கள் மீள அழைத்துக் கொள்ளப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்டாரின் தற்போதைய நிலைமை நாட்டின்...
Loading posts...
All posts loaded
No more posts
