தனியார் பேரூந்தின் மீது பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல்!

வவுனியாவில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற தனியார் பேரூந்தின் மீது பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் பேரூந்தில் பயணித்த சிலர் காயமடைந்துள்ளதாக பேரூந்தின் உரிமையாளர் தெரிவித்தார். வவுனியாவில் இருந்து மாலை 5.30 மணியளவில் செட்டிகுளம் நோக்கி பயணித்த பேரூந்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் ஏறியுள்ளதுடன், சிறிது தூர பயணத்தின் பின்னர் அவர்கள் இருவரும் பேரூந்தின் நடத்துனருடன்...

10 வருடத்தை நிறைவு செய்துள்ள ஆசிரியர்களுக்கு உடனடி இடமாற்றம்

ஒரே அரச பாடசாலையில் 10 வருடங்கள் சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள சகல ஆசிரியர்களும், அதிபர்களும் இன்னும் இரு மாதங்களுக்குள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரே பாடசாலையில் பல வருடங்கள்...
Ad Widget

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை!

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை செய்யப்படும் என்று வட.மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்தார். வவுனியா, தோனிக்கல் முத்து மாரியம்மன் ஆலய அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கு கொண்டு உரையாற்றும் போதே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “ஞாயிற்றுக்கிழமைகளிலே தனியார் கல்வி நிறுவனங்கள்...

சென். பீற்றர் தேவாலய படுகொலை நினைவேந்தல்

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயப் படுகொலையின் 22ஆவது ஆண்டு நேற்று நினைவு கூரப்பட்டது. உயிரிழந்தவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் சுடரேற்றி உணர்வு பூர்மாக அஞ்சலி செலுத்தினர். 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் அரச போர் வானூர்திகள் சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தின. அந்தச் சமயம் முன்னேறிப் பாய்ச்சல் எனும் அரச படைகளின்...

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் உயிரிழப்பு! பொலிஸார் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல்!!

வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஒருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். அதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் 6 ஆம் கட்டைப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் துன்னாலைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது...

ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிராகரிப்போம் : த.தே.ம.முன்னணி

வடக்குகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசம் என்பன அங்கீகரிக்கப்பட்டு சமஸ்ட்டி என்னும் வார்த்தையை உள்ளடக்கியதாக அமைந்தால் மட்டுமே புதிய அரசியல் யாப்பை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் இவ்வாறு த.தே.ம முன்னணியினர் நாடாத்திய ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களின் ஊடக மாநாடு தொடர்பான காணெளி   https://www.youtube.com/watch?v=7TzR8ow3SrA&feature=youtu.be   https://www.youtube.com/watch?v=Exfc3U6xTBA&feature=youtu.be   https://www.youtube.com/watch?v=yQ174qhGcvM&feature=youtu.be...

வடக்கு மாகாணத்தில் 349 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் 349 வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள், மாகாண பொதுச் சபை ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளன. இதனடிப்படையில், விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர். விண்ணப்பமுடிவுத்திகதி 2017.08.04 என அறிவிக்கப்பட்டுள்ளது. பாடங்களும் அவற்றுக்கான வெற்றிடங்களும் வருமாறு- தமிழ்-61, வரலாறு-40, குடியியல்-39, தகவல் தொழில் நுட்பம்-27,...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை: சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் அதிகாரிகளின் பிணை மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் நேற்று (வியாழக்கிழமை) யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போதே மேற்படி...

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையரிடம் தீவிர விசாரணை

கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையரிடம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபர், கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் நேற்று (வியாழக்கிழமை) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து...

தமிழ் தலைமைகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டிய தருணம் இது: சம்பந்தன்

புதிய அரசியலமைப்பிற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஐக்கியத்துடன் செயற்படுதல் அவசியமாகும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்த கருத்து தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில்...

இலங்கையில் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் முச்சக்கர வண்டி ஓட்டத்தடை

இளைஞர்கள் மத்தியில் தொழில் திறனை ஊக்குவிக்கும் வகையில் புதிய சட்டம் ஏற்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் 35 வயதிற்கு குறைவான நபர்களுக்கு முச்சக்கரவண்டி அனுமதி பத்திரம் வழங்குவது தடை செய்யும் வகையில் குறித்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. புதிய சட்டத்திற்கான வரபுகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் விரைவில் நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் கொண்டுவரப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான...

மஹிந்த அணியினரை எச்சரித்தார் விஜயகலா மகேஸ்வரன்

நீங்கள் எப்பொழுதும் இனவாதத்தையே பேசிக்கொண்டிருக்காமல் எமக்கும் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் தாருங்கள் என இராஜாங்க அமைச்சரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் எதிரணியினரை கடுந்தொனியில் எச்சரித்துள்ளார். இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக அவர் நாடாளுமன்றில்...

வங்கியில் வைப்பிலிடப்பட்ட 20 இலட்சம் ரூபா மாயம்

வவுனியாவில் வங்கி ஒன்றில் வைப்பிலிடப்பட்ட 20 இலட்சம் ரூபாவை வேறு ஒருவர் கையாடல் செய்து பணத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று (06) முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா வங்கியில் கடந்த மாதம் 05 ஆம் திகதியன்று புதிய வங்கிக் கணக்கு ஒன்று ஆரம்பித்து வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதற்கு...

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி, சிலர் நிதி மோசடியில் ஈடுபடுகின்றனர். இவ்விடயத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார். “இலங்கை மற்றும் கனேடிய அரசாங்கங்களுக்கு இடையில், வேலைவாய்ப்புத் தொடர்பில் எந்தவொரு ஒப்பந்தங்களும் இல்லை. “அண்மையில் கனடாவில் வேலைப் பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த பெண் ஒருவரை,...

சக பொலிஸ் அதிகாரியின் பெறுமதியான கடிகாரத்தை திருடிய பொலிஸ் அதிகாரி

ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சக பொலிஸ் அதிகாரியின் 1 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான கைக்கடிகாரத்தை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் பரிசோதகர், வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணைக்காக யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்க நேற்று...

நான்கு பேர் இணைந்து சட்டம் இயற்ற முடியுமாயின் நாடாளுமன்றம் எதற்கு? : சுமந்திரன்

”நாட்டில் என்ன நடக்கவேண்டுமென நான்கு பேர் இணைந்து சட்டமியற்றக்கூடியதாக இருக்குமென்றால் இந்த நாடாளுமன்றம் எதற்கு?” என நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டிற்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லையென்றும், பலவந்தமாக காணாமல்போகச் செய்வதிலிருந்து ஆட்களை பாதுகாக்கும் சர்வதேச சமவாய சட்டமூலம் அவசியமில்லை என்றும், அண்மையில் மகாநாயக்கர்கள் தெரிவித்திருந்தமை தொடர்பாகவே அவர் இவ்வாறு...

வடக்கில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு: மின்சக்தி அமைச்சர்

மாற்று சக்தி மின் நிலையத்தில் வடக்கில் உள்ள 2000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையின் மிகப்பெரிய மாற்று சக்தி மின் உற்பத்தி நிலையத்துக்கான வேலைத்திட்டம், கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் மிகப்பெரிய மாற்று...

நந்திக்கடலை அண்டிய பகுதிகளில் மீன்பிடி தொழில் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக நந்திக்கடலை அண்டிய பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 4 ஆயிரத்து 800 குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களை விட இந்த வருடம் ஏற்பட்டுள்ள அதிக வறட்சி காரணமாக நந்திக்கடல் பகுதி அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன், நந்திக்கடலை...

பிரதமர் மோடியின் அனுபவ குறிப்புடன் முதல்வர் விக்கியை சந்தித்தார் தமிழிசை

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்ததுடன் பிரதமர் மோடியின் அனுபவ குறிப்பு ஒன்றினையும் வழங்கியுள்ளார். யாழ்பாணத்திற்கான விஜயத்தினை நேற்று (வியாழக்கிழமை) மேற்கொண்டிருந்த தமிழிசை, வடக்கு முதலமைச்சரின் இல்லத்தில் அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த தமிழிசை இச்சந்திப்பு சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றதாகவும் பிரதமர்...

குளிரூட்டப்பட் அறையில் உள்ளவர்கள் வனாந்தர வெளியில் வாழ்ந்து வரும் மக்களின் நிலையை பார்க்க வேண்டும்: ஸ்ரீதரன்

கொழும்பில் குளிரூட்டப்பட் அறையில் இருந்து தீர்மானம் எடுக்கும் அமைச்சர் வடக்கில் வனாந்தர வெளியில் வாழ்ந்து வரும் மக்களின் நிலையை பார்க்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். வடக்கில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) சபை ஒத்திவைப்பு வேளையில் கலந்து கொண்டு கருத்து...
Loading posts...

All posts loaded

No more posts