Ad Widget

யாழில் பாடசாலை மாணவர்களை தகாத உறவுக்குட்படுத்திய ஐவர் கைது

ஊர்காவற்துறையில் பாடசாலை மாணவர்களை தகாத உறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 5 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள், ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்துறையிலுள்ள பாடசாலை ஒன்றில் 8ஆம் தரத்தில் கல்விகற்கும் மாணவர்கள் மூவரை 8 பேர் கொண்ட குழுவினர் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று, கட்டாயப்படுத்தி தகாத உறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாணவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், குறித்த 8 சந்தேகநபர்களையும் கைதுசெய்ய முற்பட்ட போது மூவர் தப்பியோடியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட ஏனைய ஐவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மூன்று மாணவர்களும் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts