Ad Widget

வடக்கில் மீண்டும் காலூன்றுகிறது இலங்கை சுங்க திணைக்களம்

ஆயுதப் போராட்டத்தால் வடக்கில் முடக்கப்பட்டிருந்த இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள், மூன்று தசாப்தங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதனடிப்படையில், காங்கேசன்துறையில் இம் மாதம் சுங்கத் திணைக்களத்தின் முதலாவது பணியகம் திறந்துவைக்கப்படவுள்ளது.

யுத்தத்திற்கு பின்னர் வடக்கில் அதிகரித்து வரும் கடத்தல் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டே சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சுங்கத் திணைக்களத்தின் அலுவலகங்கள் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காங்கேசன்முறை, வல்வெட்டித்துறை, ஊர்காவற்றுறை மற்றும் தலைமன்னார் ஆகிய ஆறு இடங்களில் திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts