முதலமைச்சருக்கு எதிராக டெனிஸ்வரன் மனு

தன்னை அமைச்சர் பதவியிலிருந்து, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீக்கியமையை எதிர்த்து, வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றிலேயே அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். தன்னைப் பதவி நீக்கியதற்கு எதிராகத் தடை விதிக்கும்படியும், வடமாகாண சபையின் உறுப்பினர்களான குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தடை விதிக்குமாறும் அந்த...

துணுக்காய், அக்காயராயன் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு பேரூந்து சேவையை ஆரம்பிக்குமாறு கோரல்

முல்லைத்தீவு - துணுக்காயில் இருந்து கிளிநொச்சி அக்கராயன் வழியாக யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற பஸ் சேவைகள் கடந்த ஆறாண்டுகளாக நடைபெறாததன் காரணமாக போக்குவரத்தில் ஈடுபடுகின்ற மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். துணுக்காய், உயிலங்குளம், ஆலங்குளம், தென்னியங்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், அக்கராயன், ஸ்கந்தபுரம், முக்கொம்பன், பூநகரி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் ஸ்கந்தபுரம் கிளிநொச்சி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் பஸ் சேவைகள் நடைபெற்றன....
Ad Widget

தமிழ் பெண்மணிக்கு கிடைத்த ஆசியாவின் உயரிய கௌரவம்!

இலங்கை தமிழ் பெண்மணி கெத்சி சண்முகத்திற்கு ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படும் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் கலாச்சார நிலையத்தில் இந்த விழா இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் உளவள ஆலோசகர் கெத்சி சண்முகம் தமக்கான விருதை பெற்றுக்கொண்டார். பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபரான ரமோன் மகசேசே நினைவாக ஆண்டு தோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து செயல்படுவோருக்கு...

உணவுப் பொதியின் விலையை அதிகரிக்க தீர்மானம்!

உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் 10 ரூபாவால் ​அதிகரிக்கப்படவுள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. 20 மைக்ரோன் அல்லது அதனை விட குறைந்த அளவுடைய பொலித்தீன் பாவனை அண்மையில் அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தடை சட்டம் நேற்று முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புனித ஹஜ் பெருநாள் இன்று!!

உலகலாவிய முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் விசட பெருநாள் தொழுகைகள் இடம்பெறுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஹஜ் பெருநாள் சமத்துவத்தின் அடிபடையிலான உயரிய சமூக நீதிக்கு...

இதயசுத்தியுடன் கூடிய அதிகாரப் பங்கீடு வேண்டும் : சம்பந்தன்

நாடு பிரிக்கப்படுவதை விரும்பவில்லை எனவும், மாறாக நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மை இனத்தவரும் சுயகௌரவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நாட்டுக்கு வருகை தந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலக தூதுவர் அலிஸ் வெல்ஸ்க்கும் இடையிலான...

இலங்கைத் தமிழர்களின் தீர்வில் இந்தியா உறுதி: சுஷ்மா சுவராஜ்

இலங்கைத் தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கு இந்தியா உதவுவதுடன், அவர்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்தபோதே சுஷ்மா சுவராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது...

வல்வெட்டித்துறையில் மீனவரை காணவில்லை

யாழ். வல்வெட்டித்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மீனவரின் உறவினர்களால் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் காணாமல் போன மீனவரைத் தேடி சக மீனவர்கள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த...

தமிழ் பெண்களை அவதானிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ) புலனாய்வுத் துறை என்ற பெயரில், அந்த இயக்கத்தின் இலட்சினையுடன் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், வவுனியாவில் உள்ள வீதிகள் சிலவற்றில், வீசப்பட்டு கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு பிரதேசத்தில் உள்ள வீதிகள் மற்றும் சிறி டெலோ கட்சியின் காரியாலயத்துக்கு அண்மையில், வீசப்பட்டுக் கிடந்த நிலையிலேயே அந்தத் துண்டுப் பிரசுரங்களை...

யாழில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் 53 வயதுடைய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஆசீர்வாதப்பர் வீதிப் பகுதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன் (வயது 53) என்ற வயோதிபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் யாழ்....

அதிரடிப்படை பாதுகாப்பின் மத்தியில் கிரிக்கெட் போட்டி!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில், மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள போட்டியின் போது 1,000 பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட போட்டியில் 3 போட்டிகள் நிறைவடைந்த...

யாழில் சிங்கள பாடசாலையினை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

யாழில் 512ஆவது படைமுகாம் அமைந்துள்ள சிங்கள பாடசாலையினை மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கைமேற்கொள்ள வேண்டுமென சர்வமத குழுவின் செயலாளர் வணபிதா டானியல் டிக்சன், அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அஸ்கிரிய மகாநாயக்க தேரர் யாழ்.மாவட்ட செயலகத்தில் சர்வமத குழுவினரை சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் போது, இந்துமத குருமார்கள், ஓய்வூதியம் மற்றும்...

அனைத்தையும் மனித உரிமை மீறல்களாக கருதமுடியாது: ராஜித

யுத்தத்தின்போது இடம்பெற்ற அனைத்து சம்பவங்களையும் மனித உரிமை மீறல்களாக கருதமுடியாது என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, பிறேஸிலில் இலங்கைக்கான...

வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம்!

வடக்கு மாகாணத்தில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. வடக்கு மாகாணத்தின் பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட இந்தப் பரீட்சையில் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மட்டும் பரீட்சைகளுக்காக உள்ளீர்க்கப்பட்டிருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்களுக்கான நியமனக் கடிதங்களை மிக விரைவில் வழக்கப்படவுள்ளதாக...

உரிமையை பற்றி பேசும் அரசியல்வாதிகள் உயிர் வாழ்வதை பற்றி சிந்திக்க வேண்டும்

எப்பொழுதும் உரிமை உரிமை என பாலர் பாடசாலை முதல் எல்லா மேடைகளிலும் பேசுகின்ற அரசியல்வாதிகள் மக்களின் வறுமையை நீக்கி அவர்கள் மூன்று வேளை சாப்பிடுவதற்கும் வழி செய்ய வேண்டும் என கிளிநொச்சி பொன்னகர் மத்தி, அக்கராயன் கரிதாஸ் குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் உரிமையை பெற்றுத் தருகின்ற நேரத்தில் நாங்கள் உயிரோடு இருப்போமா என்ற நிலையில்...

வடமாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 30 வருட காலமாக நிலவிய மோதல் காரணமாக வடமாகாணத்தில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது. இதில் சிங்கள மொழி ஆசிரியர் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக அமைந்திருந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வாக மோதல் நிலவிய காலப்பகுதியில் இருந்து வடமாகாணத்தில் சிங்கள மொழியில் பாடசாலைகளில்...

வடமாகாண வைத்தியசாலைகள் அபிவிருத்தி

வடக்கு மாகாணத்தில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. வடமாகாணத்தில் உள்ள மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குதல் மற்றும் பொதுமக்கள் மீள குடியமர்த்தப்படும் பிரதேசங்களில் சுகாதார அடிப்படை வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கமைவாக இந்த பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியாசாலைகளை அபிவிருத்திசெய்வதற்கான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைவாக நெதர்லாந்து அரசாங்கத்தின்...

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாட்படினது பல மாவட்டங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றன. முல்லைத்தீவு நகரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், சிவனேசன், ரவிகரன், புவனேஸ்வரன் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் பங்கு கொண்டிருந்தனர். நகர மத்தியில் இருந்து மாவட்ட செயலகம் முன்பாக...

காணாமல்போன உறவுகளால் ஐ.நா. செயலாளருக்கு மகஜர் கைளிப்பு!

சர்வதேச காணாமல்போனோர் தினத்தில் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் ஐ.நா. செயலாளருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்.நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த பேரணி யாழ்.ஐ.நா.அலுவலகத்தினைச் சென்றடைந்து அங்கு ஐ.நா.செயலாளர் அன்ரோனியோ குட்டரஸிற்கான மகஜர் கையளிக்கப்பட்டது. வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் சிவில் சமூகங்கள் இணைந்து மேற்படி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தன.

இலங்கை அணி மீது தண்ணீர்ப் போத்தல் வீசியோரை கைது செய்ய நடவடிக்கை!!!

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையில், கண்டி-பல்லேகல சர்வதேச மைதானத்தில், கடந்த 27ஆம் திகதியன்று இடம்பெற்ற போட்டியின் போது, இலங்கை கிரிக்கெட் அணியினரை இலக்குவைத்துத் தண்ணீர்ப் போத்தல்களை வீசிய, இரசிகர்களைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர். பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரிலேயே, இந்த சம்பவம் தொடர்பிலான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை அணியின் வீரர்களை நோக்கி, தண்ணீர்ப்...
Loading posts...

All posts loaded

No more posts