- Monday
- May 18th, 2026
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும் சுவிஸ்குமாரை கொழும்பிற்கு தப்பிச்செல்ல யாழ். உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் உதவினார் என ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், ஸ்ரீகஜன் குறித்து பல முக்கிய விடயங்களை நீதிமன்றத்தில் சுவிஸ்குமார் தெரிவித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது...
கிளிநொச்சி மாவட்டத்தின் இரு பிரதேச செயலாளர்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் கண்டாவளைக்கும், கண்டாவளை பிரதேச செயலாளர் த.முகுந்தன் கரைச்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேவைக் காலத்தைக் கருத்திற்கொண்டு, பொதுச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக உள்வாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்படவிழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. குறித்த திரைப்பட விழா யாழ்ப்பாணம் மெஜஸ்டிக் திரையரங்கில் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. மூன்றாவது தடவையாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இந்த சர்வதேச திரைப்படவிழாவில் 25 நாடுகளைச் சேர்ந்த 100 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதுடன் குறுந்திரைப்படங்களும் ஆவணப்படங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இளம் படைப்பாளர்களையும்,...
இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் மறைமுகமாக மலேரியா தாக்கத்திற்கு உள்ளாகக்கூடிய சந்தர்ப்பம் மிக மிக அதிகமாக உள்ளதாக மலேரியா நோய் தடுப்பு பிரிவின் மன்னார் மாவட்ட பிராந்திய வைத்திய அதிகாரி டாக்டர் கே.அரவிந்தன் தெரிவித்துள்ளார். மலேரியா நுளம்பின் தாக்கம் மற்றும் அதன் பரவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில்...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த வழக்கின் விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய...
யாழ். மண்டைதீவு பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் சற்றுமுன் ஒப்படைக்கப்பட்டது. மண்டைத்தீவு கடற்பரப்பில் படகில் பயணம் செய்த மாணவர்கள் ஆறுபேர் படகு கவிழ்ந்ததால் உயிரிழந்தனர். இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் பிரேத பரிசோதனையின் பின் இன்று கையளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை மாணவர்கள் உயிரிழப்பதற்கு முன்னர் ஏதேனும் அருந்தியிருந்தனரா என்பது தொடர்பாக...
பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் போர் வெற்றிக்காக அன்பளிப்பாக வழங்கிய காணியில் வேலை புரிவதற்காக முன்னாள் போராளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டின் கட்டட வேலைக்கான உதவியாளர்களாக பணியாற்ற வந்தவர்களில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நாராஹென்பிட்டி ஹிங்...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுண்ட பின்னர் யாழ். வேலணை மக்கள் தன்னைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து அடித்த போது, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனே தன்னை காப்பாற்றி குடும்பத்திடம் ஒப்படைத்தார் என வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும் சுவிஸ்குமார் சாட்சியமளித்துள்ளார். வித்தியா கொலை வழக்கின் எதிரிகள் தரப்பு சாட்சியப்பதிவு நேற்று...
யாழ். மண்டைத்தீவு கடற்பகுதியில் பாடசாலை மாணவர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, 5 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக 18 மாணவர்கள் குறித்த கடற்பரப்பில் படகு சவாரி செய்திருந்த நிலையில், படகு கவிழ்ந்து 7 பேர் கடலுக்குள் விழுந்துள்ளனர். அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் நீந்தி கரையை அடைந்துள்ளார். இந்நிலையில்,...
‘கொழும்பில் பிளாட் வாங்கு வதற்குப் பணம் தேவையா கவுள்ளது. சீதனத் தொகையை 25 லட்சம் ரூபாவாக அதிகரித்துத் தாருங்கள்’’ என்று மண மகனின் தாயார் மணமகளி டம் கேட்டுள்ளார். அதன் பின்னரே முன்பள்ளி ஆசிரியை உயிரை மாய்த்தார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியை நேற்றுமுன்தினம் அவரது சகோதரியின் வீட் டின் குளியலறையில் தூக் கில்...
இந்திய ரசிகர்கள் போல் வீரர்களுக்கு எதிராக கூச்சலிட்டு வசைபாடுவதை இலங்கை அணி ரசிகர்கள் நிறுத்தி விட்டு இலங்கை கிரிக்கெட்டை நிர்வகித்துவரும் அதிகாரிகளுக்கு எதிராக கூச்சலடித்து அடித்து வசைபாடுமாறு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள பெற்றறோலியக் கூட்டுத்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்...
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி வரையில் இலங்கைக்கு சூரியன் உச்ச வெப்பநிலையை கொடுக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. இதனால் வடக்கில் மேலும் வெப்பநிலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது, அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு செங்குத்தாக சூரியன் பயணிக்கவுள்ளது....
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு ஊசியை பதிவு செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள மருந்து தொடர்பில் ஆய்வுகள் நடைபெறுகிறது. தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது தேசிய ஒளடதங்கள் அதிகார சபையின் தலைவர் டொக்டர் ஹசித டி சில்வா இந்த விடயத்தை குறிப்பிட்டார். இந்த மருந்து வேறு நாடுகளில் பயன்படுத்துவது தொடர்பான விபரங்களும் விரிவாக ஆய்வு...
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவை கடற்படையினரே கொன்றனர் என்றும், தம் மீது வீண்பழி சுமத்தி மக்களை நம்ப வைத்து விட்டனர் என்றும் வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபரான மகாலிங்கம் சசீந்திரன் சாட்சியமளித்துள்ளார். வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள், யாழ் மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில், கடந்த இரண்டு மாத...
யாழ்ப்பாணம் - மண்டைதீவு கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் பயணித்த படகு உரிய தரத்துடன் இல்லாமை மற்றும் மாணவர்கள் மதுபோதையில் இருந்தமையே இந்த அனர்த்தத்திற்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 7 மாணவர்கள், பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் நகக் கீறல்களுடன் ஒருவர் வெளியில் உள்ளாரென்றும், சட்டவைத்திய அதிகாரிகளை மீள அழைத்து சாட்சி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிரிகள் தரப்பு வழக்குத் தொடுநர் ஆறுமுகம் ரகுபதி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில், எதிரிகள் தரப்பு சாட்சியப்பதிவு நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமானது. இதன்போது, ஜின்டெக் நிறுவனம் வழங்கிய அறிக்கையின்...
கடந்த வாரம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டதையடுத்து வர்த்தகர்கள் விலைகளை உயர்த்தி வருவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை மொத்த வியாபாரத்தில் அரிசிக்கான மொத்த விற்பனை விலை 75 தொடக்கம் 92 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட நாடு, பொன்னி, வெள்ளை அரிசி முறையே 65,75,80 ரூபாவாகவும், உள்நாட்டு சிவப்பரிசி 78 ரூபாவாகவும் சம்பா 92 ரூபாவாகவும்...
மழையுடனான காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன் முன்னேற்பாடாக சுகாதார தரப்பினருடன் இணைந்து டெங்கு நுளம்பை ஒழிப்பதற்கு தாயாராகவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் நாட்டில் மழையுடனான காலநிலை நிலவவுள்ளமையால் டெங்கு நுளம்பு பரவுவதை முற்றாக தடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது...
யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் சீதன வன்கொடுமையால் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் இன்னும் சில நாட்களில் திருமணத்துக்குத் தயாராக இருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார் ஏற்கனவே கேட்ட சீதனத்திற்கு மேலதிகமாகக் கேட்டமையினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் தந்தையை இழந்த குறித்த பெண்ணின் இந்த...
இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்ற வன்முறைகளுக்கு உளவியல் தாக்கங்களே காரணம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உளநலமருத்துவ விடுதி மற்றும் வைத்தியவர்களுக்கான விடுதி என்பனவற்றை இன்று (திங்கட்கிழமை) காலை திறந்துவைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முதலமைச்சர், ”உளநலப் பிரச்சினைகளால்...
Loading posts...
All posts loaded
No more posts
