‘கொழும்பில் பிளாட் வாங்கு வதற்குப் பணம் தேவையா கவுள்ளது. சீதனத் தொகையை 25 லட்சம் ரூபாவாக அதிகரித்துத் தாருங்கள்’’ என்று மண மகனின் தாயார் மணமகளி டம் கேட்டுள்ளார்.
அதன் பின்னரே முன்பள்ளி ஆசிரியை உயிரை மாய்த்தார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
ஆசிரியை நேற்றுமுன்தினம் அவரது சகோதரியின் வீட் டின் குளியலறையில் தூக் கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பருத்தித்துறையைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியையின் பெற்றோர்கள் இறந்துவிட்ட னர். கொழும்பில் பெரிய தாய் வீட்டில் அவர் தங்கி யிருந்து அங்குள்ள முன்பள் ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். அவ ருக்கும் வெள்ளவத்தையில் மற்றொரு குடும்பத்தினரின் மகனுக்கும் திருமணம் பேசப்பட்டது.
சீதனமாக மட்டுவிலில் பெண்ணின் பெயரில் வாங்கிய காணியில் வீடு கட்டித் தருவதாகவும் சீதனமாக 15 லட்சம் ரூபா வழங்குவதாகவும் கூறப்பட் டுத் திருமணத்துக்குச் சம்ம தம் தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும் டிசெம்பர் 28ஆம் திகதி திருமணம் செய்வ தென்று நாள் குறிக்கப்பட்டது.
தனக்குரிய பொருள்களை வாங்குவதில் பெண் ஆர்வம் காட்டினார். பல பொருள் களை வாங்கியும் அவர் வைத்துள்ளார். இவருக்கு மூத்த சகோதரியும் இளைய சகோதரனும் உள்ளனர்.
சகோதரி மட்டுவிலில் திரு மணம் செய்து கைதடியி லுள்ள பாடசாலையில் ஆசி ரியையாகப் பணியாற்றுகி றார். சகோதரன் தொழில் நிமித்தம் அரபு நாடொன்றில் தங்கியுள்ளார்.
இரண்டாம் தவணை விடு முறை காரணமாகக் முன்பள்ளி ஆசி ரியை கொழும்பிலிருந்து புறப்பட்டு மட்டுவிலில் உள்ள சகோதரியின் வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில், கொழும் பில் பிளாட் வாங்குவதற்குப் பணம் தேவையாக உள்ளது. சீதனமாகத் தருவதாகக் கூறிய தொகையை 25 லட் சம் ரூபாவாக அதிகரித்துத் தருமாறு மாப்பிள்ளையின் தாயார் முன்பள்ளி ஆசிரி யையின் பெரிய தாயாரிடம் கேட்டுள்ளார்.
அவர் இந்த விடயத்தை மணமகளின் சகோதரியிடம் கூறியுள்ளார். சகோதரி தக வலை வெளியிடாமல் அரபு நாட்டில் உள்ள சகோதரனுக் குக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், மாப்பிள் ளையின் தாயார், மணமக ளுக்கு அலைபேசியில் அழைப்பு ஏற்படுத்தி சீதனத் தொகையை அதிகரித்து வழங்குமாறு கேட்டுள்ளார். இதனால் அவர் மனவிரக் திக்கு உள்ளானார்’’ என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
திடீர் இறப்பு விசாரணை அதி காரி சீ.இளங்கீரன் மற்றும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். உடற்கூற் றுப் பரிசோதனையின் பின் னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சாவகச்சேரி சட்ட மருத்துவ அதி காரி ஊடாக உடற்கூற்றுப் பரி சோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்கு மாறும் பணிக்கப்பட்டது.