யாழில் கார் – முச்சக்கரவண்டி மோதி விபத்து ; வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இருவர் உட்பட 5 பேர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் – முச்சக்கர வண்டி விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இருவர் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 67 மற்றும் 70 வயதுடைய இருவர் வாடகைக் கார் ஒன்றில் மண்கும்பான் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவர்களின் காருக்கு எதிரே வந்த முச்சக்கரவண்டியில் மோதி விபத்துக்குள்ளானது.

அதன்போது காரில் பயணித்த பிரான்ஸ் நாட்டவர்கள் இருவர் மற்றும் கார் சாரதி, முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் ஆகிய ஐவரும் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts