- Tuesday
- June 16th, 2026
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு அம்மன் கோவிலடியில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியரை கடுமையாகத் தாக்கிவிட்டு நகை மற்றும் பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. கொள்ளைக் கும்பலின் தாக்குதலால் காயங்களுக்குள்ளான வயோதிபத் தம்பதியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை (18) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றது என்று...
தெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி குறித்த காணி விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 51வது படைப்பிரிவினால் பயன்படுத்தப்பட்ட காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே...
அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு வடக்கு அதிகாரிகள் அடிபணியக் கூடாது என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்திற்கான 110 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கைதடியில் உள்ள உள்ளுராட்சி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் தெரிவித்த அவர், ”அரசியல்வாதிகள்...
மாணவர்களின் நலனில் அக்கறையுடன் செயற்படும் ஆசிரியர்களின் வசதிகள் மற்றும் சலுகைகள் அதிகரிக்கப்படுமே தவிர குறைக்கப்படாது என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பாடசாலை விடுமுறை காலத்தில் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுவத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில் இதுதொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேற்கண்டவாறு...
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் முழுமை பெற்றுள்ளதாக வட.மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் வீ.பிறேம்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘வட.மாகாணத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாக காணப்படும் கிளிநொச்சி இரணைமடுக்குளம். கடந்த 1975 ம் ஆண்டுக்கு...
லண்டனில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பெண் ஒருவர் சாவகச்சேரி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். லண்டனில் இருந்து நாடு திரும்பிய 64 வயதான குறித்த பெண், அவருடைய உறவினர்களுடன் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து...
தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் பிணை விண்ணப்பத்தை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் நிராகரித்தது. “சந்தேகநருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. அவற்றின் சில ஆவணங்கள் மன்றில் இன்னும் முன்வைக்கப்படவில்லை. எனவே சந்தேகநபரைப் பிணையில்...
சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலைக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மலரஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கான குருதி சுத்திகரிப்பு நிலையத்தை நேற்று (வியாழக்கிழமை) திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், சுகாதார அமைச்சருடன், பிரதி சுகாதார அமைச்சர்,...
வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் தற்போதைய அரசால் வழங்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன யாழில் தெரிவித்தார். யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மக்களின் முழு ஒத்துழைப்புடேனேயே நாம் ஆட்சியை...
ஓர் அரசியல்வாதியை ஆளுநராக நியமித்தமையினால், நாம் இன்று நீதிமன்றில் நிற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார். அத்துடன், போர்க்காலத்தில் மஹிந்த அரசு செயற்பட்டதைப் போலவே, இந்த நல்லாட்சி அரசும் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினார். யாழில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு...
முல்லைத்தீவு – செம்மலை – நாயாறு பகுதியில், கடந்த 7 வருடங்களாக தமிழ் மீனவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்ற வகையில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த, ஒருசில தென்னிலங்கை மீனவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன்போது, சுனில் நிஷாந்த என்ற தனிநபருக்கு சொந்தமான பல மீன்பிடி படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் நேற்று (வியாழக்கிழமை) பொலிஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து...
யாழ். மாவட்டத்தில் காணப்படும் மருத்துவர்கள் மற்றும் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அமைச்சர் முன்வர வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட தாதிகள் விடுதி மற்றும் இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை கிளை ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று (வியாழக்கிழமை)...
யாழ்.நகரப்பகுதியில் உள்ள விடுதியில் 3 இலட்சம் ரூபா பணமும், 12 பவுண் நகையும் திருடப்பட்டுப்போனதையடுத்து விடுதி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்.நகர் விக்டோறியா வீதியில் அமைந்துள்ள வெளிமாவட்டத்தவர்களுக்கான விடுதியிலேயே நேற்று (வியாழக்கிழமை) இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெளிமாவட்டத்தில் இருந்து சகோதர மொழி பேசும் குடும்பத்தினர் சுற்றுலாவின் நிமித்தம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் குறித்த விடுதியில் தங்கியபோது,...
இந்தியா தனது மிகச்சிறந்த அரசியல் தலைவரை இழந்துள்ளது என முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மறைவு குறித்த இரங்கல் செய்தியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “முன்னாள் பாரத பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியின்...
எல்லை நிர்ணய அறிக்கைக்கு இம்மாதத்திற்குள் நாடாளுமன்ற ஒப்புதல் வழங்கப்படின், மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க அண்மையில் ஊடங்களுக்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது...
அரச மருந்தகக் கூட்டுதாபனத்தின் புதிய விற்பனை கிளை யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் புதிய விற்பனை கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து புனர்வாழ்வு நிலையத்துக்கான புதிய கட்டடத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த அமைச்சர், வைத்தியசாலையின் நோயாளர் விடுதி போன்றவற்றை...
கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது வெள்ளவத்தை பீட்டர்சன் வீதியில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாயாரான பிரியதர்சினி புஷ்பராஜா (வயது -46) என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது கணவர் மருத்துவர்....
இராணுவ கனரக வாகனம் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொதுமகன் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் நேற்று புதன்கிழமை (15) மாலை 4.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது. கிளிநொச்சியிலிருந்து இரணமடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பத் தலைவரை அதே திசையில் பயணித்த இராணுவ வாகனம்...
வடக்கு மாகாணத்தில் கூட்டுறவை விரிவாக்கும் வேலைத்திட்டம் மூலமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைக் கூட்டுறவு அமைப்புகள் புதிதாக இணைத்துள்ளன. இந்த ஆண்டுக்கான கூட்டுறவின் நாற்பது வேலைத்திட்டங்களில் புதிதாக அங்கத்தவர்களைச் சங்கங்களில் இணைக்கும் பணிகள் பெரிதும் வெற்றியளித்துள்ளன என்று வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார். அநேகமான கூட்டுறவுச் சங்கங்கள் இந்த அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத்திட்டத்தில்...
யாழ். குடாநாட்டில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களாக யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு மற்றும் போதைப்பொருட்கள் பாவனை, வீடுகள் மீதான தாக்குதல்கள் என பல குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், யாழில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் சில குழுக்களின் இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக...
Loading posts...
All posts loaded
No more posts
