நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் இன்று

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு நேற்று இடம்பெற்றது. அதன் பின்னர் விசேட பூஜை வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், இன்று காலை கொடியேற்ற பெருவிழா இடம்பெறவுள்ளது. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்...

மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் பிரதமர் பங்கேற்பு!

மன்னார் மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று (புதன்கிழமை) கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. இன, மத பேதங்களுக்கு அப்பால் இலட்சக் கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற திருவிழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துக் கொண்டார். இதன்போது, மடு அன்னையின் ஆவணித் திருவிழாவிற்காக கிறிஸ்தவ அமைச்சினால்...
Ad Widget

குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதம்!!

யாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை வழக்கத்திற்கு மாறாக திடீரென பலத்த காற்றுடன் கடும் மழை பெய்ததில் காரைநகரில் எட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. மாலை 6 மணியளவில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் மிகவும் அதிகரித்து காணப்பட்டதுடன் மழைப் பொழிவும் கனமாக காணப்பட்டுள்ளது. காரைநகர்...

தாயும் மகனும் கிணறிலிருந்து சடலமாக மீட்பு!!

வவுனியா கூமாங்குளம் கிராம அலுவலரின் அலுவலகத்துக்கு அருகே இன்று காலை 10 மணியளவில் கிணறு ஒன்றிலிருந்து தாயும் மகனும் சடலமாக மீட்கப்பட்டனர். “பெண்ணையும் அவரது 5 வயதுடைய மகனையும் காணவில்லை என அயலவர்கள் தேடிய சமயத்தில் அவர்கள் கிணற்றில் சடலமாக காணப்பட்டனர். 33 வயதுடைய தாயும் 5 வயதுடைய சிறுவனுமே சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களது உயிரிழப்பில்...

‘வெளியில் சந்தோஷமாக வாழ ஆசையில்லையா?’ இராணுவத்தின் அச்சுறுத்தலினால் திலீபனின் நினைவிட புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தம்!!

இராணுவத்தினரின் அச்சுறுத்தலை தொடர்ந்து யாழ். நல்லூரில் முன்னெடுக்கப்பட்டு வந்த தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் அங்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) சிவில் உடையில் வந்த இராணுவத்தினர், ‘வெளியில் சந்தோஷமாக வாழ ஆசையில்லையா?’ என கேட்டு அச்சுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர...

த.தே.ம.முன்னணியினால் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு!

ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி என்னும் திட்டத்தின் மூலம் திட்டப்பட்ட நிதியிலிருந்து தாயகத்தில் வாழும் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக வழங்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால், கௌதாரிமுனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில்...

மழையுடனான காலநிலையும் காற்றின் வேகமும் இன்று அதிகரிக்கும்!!

நாட்டில் காணப்படும் மழையுடனான காலநிலையும் காற்றின் வேகமும் இன்று குறிப்பிட்ட மட்டத்திற்கு அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டமாக காணப்படக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். மத்திய மற்றும்...

நீதிமன்ற உத்தியோகத்தரிடம் சங்கிலி அறுக்க முயற்சி!

யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் (சிறுவர் நீதிமன்றம்) பணியாற்றும் பெண் உத்தியோகத்தரிடம் சங்கிலி பறிக்கும் முயற்சி அவரின் சாதூரியத்தால் தடுக்கப்பட்டது. சங்கிலி பறிப்பைத் தடுத்த அந்த பெண் உத்தியோகத்தர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள மேலதிக நீதிவான்...

பாதாள உலகக் குழுக்களை போன்று ஆவா குழுவினர் பயங்கரமானவர்கள் அல்ல! – சட்டம் ஒழுங்கு அமைச்சர்

தென்னிலங்கையில் செயற்படுகின்ற பாதாள குழுக்களை போன்று வடக்கில் இயங்குகின்ற ஆவா குழுவினர் பயங்கரமானவர்கள் அல்ல என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் தெரிவித்தாவது- தென் மாகாணங்களில் பாதாள...

யாழ் நீர்வேலி வாள்வெட்டு: இரு இளைஞர்களுக்கு விளக்கமறியல்!

நீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் வைத்து கடந்த மே 7ஆம் திகதி இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் 24 மற்றும்...

தமிழ் தலைவர்களின் அகந்தையே அரசியல் பின்னடைவுகளுக்கு காரணம்: முதலமைச்சர்

தமிழ் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையுமே தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திக்க காரணம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “30...

யாழில் சீன ஆய்வாளர்கள் அகழ்வுப் பணியில்!

யாழ்.அல்லைப்பிட்டி கடற்பகுதியில் சீன நாட்டுக் கப்பல் ஒன்று 500 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியதாக தெரிவித்து, சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை தொல்பொருள் திணைக்களத்துடன், இணைந்து இந்த அகழ்வாராய்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இற்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்பின் அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த சீனக் கப்பலொன்று விபத்திற்கு உள்ளாகி மூழ்கியதாகவும்,...

முல்லைத்தீவு வாடிகள் எரிப்பு சம்பவம் : வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மூவர் கைது

முல்லைத்தீவு - நாயாற்றுப் பகுதியில் கடற்றொழிலாளர்களின்  வாடிகள்  எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டதாக  முல்லைத்தீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவரே  கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை முல்லைத்தீவு கடற்பரப்பில் அனுமதியின்றி கடற்றொழிலில் ஈடுபட்ட 27 வெளி மாவட்ட மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது 8 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

யாழ். பல்கலையில் செஞ்சோலை மாணவிகள் படுகொலை நினைவேந்தல்!!

செஞ்சோலை மாணவிகள் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்.பல்கலைகழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. பல்கலைகழக கல்விசார் , சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். 2006ஆம் ஆண்டு காலை 6 மணி இலங்கை அரச வான்படையின்...

மீன்பிடித் தொழிலை நம்பியே எமது வாழ்வாதாரம் உள்ளது: நாயாறு மீனவ குடும்பத்தினர்

எமது பிள்ளைகளின் கல்வி, வாழ்வாதாரம் அனைத்தும் இந்த மீன்பிடித் தொழிலை நம்பியே உள்ளது என முல்லைத்தீவு நாயாறு பகுதியிலுள்ள உள்ளூர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். நாயாறு பகுதியின் உள்ளூர் மீனவர்களுக்கு சொந்தமான 8 வாடிகள் உட்பட மீன்பிடி உபகரணங்கள் யாவும் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக குறித்த மீனவ குடும்பத்தினர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டனர்....

வடக்கு, கிழக்கில் மேலும் 400 ஏக்கர் காணி விரைவில் விடுவிப்பு!

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இதுதொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள அரச மற்றும் பொதுமக்களின் 522 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்,...

செஞ்சோலையில் பாலகர்களை கொன்று குவித்த கொடிய தினம் இன்று!!

முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியிலுள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானப்படை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி ஒன்றும் அறியாத பச்சை பாலகர்களை கொன்று குவித்த கொடிய நாள் இன்றாகும். இக்கொடிய தினத்தின் 12ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போது,...

வாள்வெட்டு குழுவினரால் பேருந்து ஒன்று தீவைத்து எரிக்க முயற்சி!!

அச்சுவேலி வடக்குப் பகுதியில், தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தனியார் பேருந்து அச்சுவேலி – யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் பேருந்தின் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக் குழுவினர்,...

வட மாகாண அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் – ஆளுனர் ரெஜினோல்ட் குரே

வட மாகாண அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே வலியுறுத்தியுள்ளார். அதன் ஊடாகவே தற்போது வட மாகாண அமைச்சர்கள் சபையில் நிலவுகின்ற சிக்கலான நிலைமைக்கு இலகுவாக தீர்வு காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவின் ஊடாக பா.டெனீஸ்வரனும் அமைச்சர் என்றே...

குள்ள மனிதர்களின் பின்னணியில் யார்? வெளிப்படுத்தப்படவேண்டும் – பேராயர் தியாகராஜா

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்திவரும் குள்ள மனிதர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பில் உடடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர், கலாநிதி டேனியல் தியாகராஜா தெரிவித்தார். மேலும், இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். யாழில், தற்போது குள்ள மனிதர்கள் தொடர்பிலான அச்சம்...
Loading posts...

All posts loaded

No more posts