வவுனியா கூமாங்குளம் கிராம அலுவலரின் அலுவலகத்துக்கு அருகே இன்று காலை 10 மணியளவில் கிணறு ஒன்றிலிருந்து தாயும் மகனும் சடலமாக மீட்கப்பட்டனர்.
“பெண்ணையும் அவரது 5 வயதுடைய மகனையும் காணவில்லை என அயலவர்கள் தேடிய சமயத்தில் அவர்கள் கிணற்றில் சடலமாக காணப்பட்டனர்.
33 வயதுடைய தாயும் 5 வயதுடைய சிறுவனுமே சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களது உயிரிழப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் மேலதிக விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவலை வழங்க முடியும்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.