Ad Widget

அரச மருந்தகக் கூட்டுதாபனத்தின் புதிய கிளை யாழில்!- சுகாதார அமைச்சர் திறந்துவைப்பு

அரச மருந்தகக் கூட்டுதாபனத்தின் புதிய விற்பனை கிளை யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் புதிய விற்பனை கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து புனர்வாழ்வு நிலையத்துக்கான புதிய கட்டடத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த அமைச்சர், வைத்தியசாலையின் நோயாளர் விடுதி போன்றவற்றை பார்வையிட்டார்.

அதன் பின்னர் தாதியர்களுக்கான விடுதியினை திறந்து வைத்து, தாதியர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்விலும் கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்வுகளில் பிரதி சுகாதரத்துறை அமைச்சர், வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராசா, மாகாணசபை உறுப்பினர் சயந்தன், சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts