“நீதிக்காய் எழுவோம்” மக்கள் பேரணியின் இலக்கும் செய்தியும் சர்வதேசத்தை எட்டவேண்டும் – மாவை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நாளை முன்னெடுக்கப்படும் “நீதிக்காய் எழுவோம்” மக்கள் பேரணியின் இலக்கும் செய்தியும் ஐ.நா. மனித உரிமைகள் சபை உள்ளடங்களாக சர்வதேசத்தை எட்ட வேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதற்காக அரசியல் கடந்து அனைவரும் ஆதரவளிக்கும் முகமாக அனைவரும் பங்கேற்க வேண்டும் என...

கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவு வழங்கும் என தெரிவித்துள்ளது. இந்த அறப்போர் வெற்றிபெற அனைவரும் எமது வீட்டுப்பிரச்சினை என்ற வகையில் ஆதரவு வழங்குவோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் நேற்று (வியாழக்கிழமை) அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தெரிவிக்கையில், “ஈழ வரலாறு சோகத்தோடுதான் தொடர்கின்றது....
Ad Widget

ஆளுநரிடம் மகஜர் கையளித்திருப்பது பாரதூரமானது – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

பெருபான்மை அரசால் நியமிக்கப்பட்டுள்ள வடக்கு ஆளுநரிடம் மகஜரை கையளித்திருப்பது பிழையானதுடன் பாரதூரமான விடயம் என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 754 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்கள் நேற்று (வியாழக்கிழமை) ஊடக சந்திப்பை மேற்கொண்டனர். அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கபட்ட...

வடக்கின் அபிவிருத்தி வாக்குகள் தேவைப்படும்போதே நினைவுக்கு வருகிறது: நாமல்

வடக்கு மக்களின் வாக்குகள் தேவைப்படும்போதே அப்பகுதிகளின் அபிவிருத்தி குறித்து அரசாங்கத்துக்கு நினைவுக்கு வருகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் தேவைப்படும்போதே அரசாங்கம் வடக்கின் அபிவிருத்தியில் கவனம் செலுத்துகின்றது எனவும்...

உறவுகளைத் தேடும் பெண்கள் அரச அதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தப்படுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள் பாதுகாப்புத் துறை அதிகாரிகளாலும், அரசாங்க அதிகாரிகளாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. அத்தோடு இலங்கை பொலிஸார் தொடர்ச்சியாக சித்திரவதைகளில் ஈடுபட்டு வருகின்றனரென்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான, மனித உரிமைகள் அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையினை அமெரிக்க இராஜாங்கச்...

எங்களிடமிருந்து எதற்காக வாக்கு பெற்றீர்களோ? அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகாதீர்கள்!!!

தமது பிள்ளைகளுக்காக காத்திருந்து உயிரிழந்த ஆத்மாங்களுக்கு துரோகம் இழைக்காமல், அவர்களுக்காக பேசுங்கள். இல்லையேல் துரோகியாகிவிடுவீர்கள் என, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜெனீவாவிற்கு செல்லவுள்ள வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனை சந்தித்த பின்னர், யாழ். ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டனர். அங்கு தொடர்ந்து தெரிவித்த உறவுகள், ”எமது பிரச்சினைகளுக்கு...

மயிலிட்டி வைத்தியசாலை சேவைக்கு அரச அதிகாரிகள் தடை!- வைத்திய அதிகாரி யமுனானந்தா

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி காச நோய் வைத்தியசாலையினை புனரமைத்து சேவையினை ஆரம்பிப்பதற்கு அரச அதிகாரிகள் தடையாக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட காசநோய் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர். யமுனானந்தா இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த வருடம் இராணுவத்தினரின்...

தமிழரின் நீதிக்குரல் ஐ.நா. வரை ஒலிக்க அணிதிரளுங்கள்!- சி.வி. வலியுறுத்தல்

எமது மக்களின் நீதிக்கான குரலை ஐ.நா. வரை ஒலிக்க செய்வதற்கு அணிதிரளுமாறு வட. மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு- கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பாகநேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் எதிர்வரும்...

வடக்கில் அதிக வெப்பம்: மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதாரத் திணைக்களம்

வடக்கில் அதிகரித்த வெப்பமான சூழல் நிலவி வருகின்ற பாடசாலை மாணவர்கள் உட்பட பொது மக்கள் அனைவருக்கும் உடல் நிலையில் பாதிப்புக்கள் ஏற்படலாமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதனால், மதிய நேரங்களில் வெயிலில் வேலை செய்வதைத் தவிரத்துக் கொள்ளுமாறும் அதிகளவிலான நீராகாரங்களை அருந்துமாறும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன்...

சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையே நீதிக்கான ஒரேவழி ஐ.நாவில் கஜேந்திரகுமார்

13-03-2019 ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதான அவையில் இடம்பெற்ற பொது விவாதத்தில் விடயம் 4ல் கலந்து கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை இங்கு வருமாறு. ஐ.நா மனித உரிமைகள் பேரவை நாற்பதாவது கூட்டத்தொடர் விடயம் 4 : பொதுவிவாதம் உரையாற்றியவர்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த அறிக்கையானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டிணைந்து...

சர்வதேச குற்றவியல் நீதி விசாரணை கோரும் பல்கலை மாணவர் பேரணிக்கு ஆதரவு

ஐ.நா பாதுகாப்புச் சபையூடாக சர்வதேச குற்றவியல் நீதி விசாரணை கோரும் பல்கலை மாணவர் போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுக்களால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பது யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாகியும் தெரியாமலுள்ளது. கடந்த 10...

பாதாள உலகக் குழுத் தலைவர் மதூஷின் வடக்கு முகவராக யாழ்.வர்த்தகர் துஷ்யந்தன்!

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுத் தலைவர் என அறிமுகப்படுத்தப்பட்டு டுபாயில் வைத்துக் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதூஷின் வடக்கு மாகாண முகவராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் செயற்பட்டார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை சிங்கள ஊடகமான லங்காதீப வெளியிட்டுள்ளது. மாகந்துரே மதூஷின் கைதையடுத்து அந்த ஊடகம் வெளியிட்டுவரும் விசாரணை...

வடக்கு மக்களின் மகஜர்களை ஐ.நா.வில் கையளிக்க முடியாதென்கிறார் மஹிந்த!

ஐ.நா. செல்லும் வடக்கு ஆளுநர், வடக்கு மக்களின் மகஜர்களை அங்கு முன்வைக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டது. அவ்வாறு கையளிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஒன்றும் தபால் நிலையம் அல்ல என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை...

பால்மா விலை சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி

முன்மொழியப்பட்ட இறக்குமதி பால்மா விலை சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது யோசனை முன்வைக்கப்பட்டது. இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பருத்தித்துறையில் ஒருவர் தனக்குத் தானே தீவைப்பு

பருத்தித்துறை மந்திகை அம்மன் கோயில் பகுதியில் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (13) காலை 08 மணியளவில் நடைபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இவ்வாறு தனக்குத் தானே தீமூட்டியவர் இனங்காணப்படவில்லை. சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அம்புலன்ஸுக்கு அறிவித்துவரை அவரை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது....

முல்லைத்தீவில் ஊடகவியலாளரின் வீடு புகுந்து கொள்ளை!

முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பில் அமைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டை உடைத்து கமரா மற்றும் மடிக்கணணிகள் களவாடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளரின் வீட்டில் நேற்று பகல் வேளை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பெறுமதியான இரண்டு கமராக்கள் மற்றும் மடிக்கணணி என்பன திருடப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சபம்வம் குறித்து முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில்...

எரிபொருளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 3 ரூபாயினால் அதிகரிப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 137 ரூபாயாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 7 ரூபாயினால், அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதன் புதிய விலை 157 ரூபாயாகும்....

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஆசிரியர் சங்கம்

பல கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதிபர்கள், இலங்கை கல்வி சமூக சம்மேளனம், உள்ளிட்ட கல்வித்துறையுடன் தொடர்புபட்ட 30 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிபர்,...

இன அழிப்பு தொடர்பான ஆதாரங்களுடனான அறிக்கை ஐ.நா.வில் சமர்ப்பிப்பு

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பான ஆதாரங்களுடனான அறிக்கை ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் நாற்பதாவது கூட்டத்தொடரில் தமிழர் மரபுரிமைப் பேரவையினால் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பான குறித்த அறிக்கை, ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் இந்த கூட்டத்தொடரில்...

முகாமையாளர் கொலையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கின!

கிளிநொச்சி காப்புறுதி நிறுவன முகாமையாளர் கொலை விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. காப்புறுதி முகாமையாளரை கொல்லப் போகின்றேன் என சந்தேகநபர் தனது மனைவியிடம் முதல்நாள் தெரிவித்துவிட்டே இந்த கொலையை செய்தார் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி உதயநகரில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளரான வவுனியாவைச் சேர்ந்த பிறேமரமணன் (32) என்பவர்...
Loading posts...

All posts loaded

No more posts