யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லையில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்குத் தடை!!

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பொலிஸாரினால் முன்வைக்கப்படண விண்ணப்பத்துக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சார்பில் இந்த மனுக்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. முன்னர் கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் அமைந்துள்ள இராணுவத்தின் 512 பிரிகேட் தலைமையகத்துக்கு...

யாழ். பல்கலைக்கழகம், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்கும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. யாழ்.பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் சார்பில்...
Ad Widget

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரீட்சைகளை நடாத்துவதில் மாற்றம்!

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரிட்சைகளை நடாத்துவதில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. இதன்படி, சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரிட்சைகள் இனிவரும் காலங்களில் பரீட்சைகள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நடாததப்படுமென மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கையை அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய முறைமையின் கீழ் விண்ணப்பதாரிகள் அவர்கள்...

நாட்டில் டெல்டா திரிபின் மற்றுமொரு வகை கண்டறியப்பட்டுள்ளது!!

நாட்டில் பரவலடைந்துள்ள டெல்டா திரிபின் மற்றுமொரு வகை கண்டறியப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் உயிரியல் மூலக்கூற்று பிரிவின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் புதிதாக கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு B.1.617.2.104 என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாட்டில் முன்னதாக கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு B.1.617.2.287 என அடையாளப்படுத்தப்பட்ட...

தென்மராட்சியில் 16 நாட்களில் கொரோனோவால் 4 பேர் உயிரிழப்பு – 118 பேருக்கு தொற்று!

தென்மராட்சிப் பகுதியில் கொரோனாப் பரவல் மிகத் தீவிரம் பெற்றுள்ளதுடன், கடந்த 16 நாட்களில் மாத்திரம் 118 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 04 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர். தினமும் சராசரியாக 8 முதல் 10 தொற்றாளர்கள் என்றளவில் எண்ணிக்கை உயரத் தொடங்கிவிட்டதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். சுகாதார நடைமுறைகளை மக்கள் இறுக்கமாகப் பின்பற்றாமை...

யாழ். பல்கலைக்கழகத்தில் தடைகளையும் மீறி கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடான நேற்று (18) பல்வேறு தடைகளையும் தாண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது. நேற்று மாலை 6 மணி அளவில் பல்கலைக்கழகத்திற்கு கார்த்திகை விளக்கீட்டினை கொண்டாடுவதற்கு சென்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியொகத்தர்களால் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் ஆன்மீகரீதியான செயற்பாடுகளை மேற்க் கொள்ளவும்...

நாட்டில் பல மாவட்டங்களில் கொவிட்-19 கொத்தணிகள் அடையாளம்!!

நாட்டில் 5 மாவட்டங்களில் கொவிட்-19 கொத்தணிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, அனுராதபுரம், அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இவ்வாறான கொத்தணிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் நேற்று ஊடகங்களிடம் கூறினார். சுகாதார நெறிமுறைகளை மீறி குறித்த பகுதிகளில் நடைபெறும் திருமணங்கள், மத நடவடிக்கைகள் மற்றும்...

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் நேற்றுமுன்தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ண்க்கை 14 ஆயிரத்து 72 ஆக அதிகரித்துள்ளது.

பெற்றோல் – சமையல் எரிவாயு தாங்கிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன!

பெற்றோல் மற்றும் சமையல் எரிவாயுவை உள்ளடக்கிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. இதற்கமைய 36,000 மெட்ரிக் தொன் பெற்றோல் ஏற்றிய கப்பல் மற்றும் 2,500 மெட்ரிக் தொன் தாங்கிய சமையல் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்தது. மேலும் 40,000 மெட்ரிக் தொன்...

பாடசாலைகளுக்கான புதிய சுகாதார விதிமுறைகள் வெளியானது!

இதுவரை ஆரம்பிக்கப்படாதுள்ள 6,7,8 மற்றும் 9 ஆகிய வகுப்புகளின் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக புதிய சுகாதார விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியா் நிபுணர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானால் செயற்பட வேண்டிய விதிமுறைகள் உள்ளடங்கிய வழிமுறைகளை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாதகலில் மக்களின் எதிர்ப்பால் காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்படவிருந்த காணி அளவீட்டு பணிகள் மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டுள்ளது. மாதகல் J/150 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அக்காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்று(புதன்கிழமை) முன்னெடுக்கப்படவிருந்தது. காணிகளை அளவீடு செய்வதற்காக நிலஅளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் வருகை தந்தபோது, காணி உரிமையாளர்கள்,...

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளருக்கு கொவிட் தொற்று!

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். மாநகர சபை ஆணையாளருக்கு கொவிட்-19 நோய் அறிகுறிகள் காணப்பட்டதால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருடன் பணியாற்றும் 15 உத்தியோகத்தர்களிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் பிசிஆர் பரிசோதனையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறையினர்...

கடல் பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

கிழக்கு மத்திய வங்காள விரிகுடா, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில்...

கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் கண்டெடுப்பு!

கிளிநொச்சி, பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று (புதன்கிழமை) காலை பரந்தன் சிவபுரம் பகுதியில் பாழடைந்த தற்காலிக கொட்டகையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த ஆணின் சடலமானது இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கிய அடுத்து சம்பவ...

நேற்றையதின்ம் 720 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!!

நாட்டில் மேலும் 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் நேற்றையதின்ம் 720 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 552,994 ஆக...

ஒரு சிகரெட்டின் விலை 100 ரூபா வரை அதிகரிக்கும்!

சிகரெட் ஒன்றின் விலையை நிர்ணயம் செய்வதற்கு மிகவும் விஞ்ஞான ரீதியில் வடிவமைக்கப்பட்ட விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சியடைவதாகவும், சிகரட் ஒன்றின் விலையை ரூபா 5 ஆல் அதிகரித்ததைத் தொடர்ந்து, அடுத்த வருடம் அரசாங்கம் சிகரெட்டிலிருந்து 8 பில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்ப்பதாக, சுகாதார அமைச்சின் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர், விசேட...

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் பூஸ்டர் டோஸ்

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இன்று (17) முதல் வழங்கப்படவுள்ளது. பூஸ்டர் டோஸாக பைசர் கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன...

தற்காலிகமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் – உதய கம்மன்பில

அச்சத்தின் காரணமாக மக்கள் அதிகளவில் எரிபொருளை பெற்றுக்கொள்வதனால் தற்காலிகமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை கூறினார். மேலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் அது ஓரிரு தினங்களே நீடிக்கும் எனவும்...

அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு யாழ். பல்கலையில் ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகியது. தமிழத் துறையின் தலைவர் பேராசிரியர் ம. இரகுநாதன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த ஆய்வு மாநாட்டில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முதன்மை விருந்தினராகவும், கலைப்பீடாதிபதி பேராசிரியர் க.சுதாகர் சிறப்பு விருந்தினராகவும்...

வினாத்தாள்களில் புதிய மாற்றங்கள் கொண்டுவர கல்வியமைச்சு தீர்மானம்!!

புலமை பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சை வினாத்தாள்கள் தயாரிப்பில் சில மாற்றங்களை கொண்டுவர கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட தடங்கல்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கு பொறுப்பான மேலதிக...
Loading posts...

All posts loaded

No more posts