Ad Widget

யாழ். பல்கலைக்கழகம், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்கும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

யாழ்.பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவரும், பட்டயக் கணக்காளருமான மனில் ஜெயசிங்கவும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஒப்பமிட்டனர்.

கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடத்திலுள்ள கணக்கியல், நிதிமுகாமைத்துவம் மற்றும் வணிகம் (கணக்கியலும், நிதியும்) ஆகிய துறைகளில் பயின்று சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் பட்டமளிப்பு விழாவின் போது இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

Related Posts