Ad Widget

யாழ்.பல்கலைகழக நிதியாளருக்கு எதிராக சிரேஷ்ட விரிவுரையாளர் முறைப்பாடு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் திருமதி துஷானி சயந்தன், பல்கலைக் கழகச் சட்டத்துக்கு விரோதமான முறையில் நிதியாளர் தனது சம்பளத்தை நிறுத்தியதனால் தனது வாழ்வாதாரம் சவாலுக்குட்டபடுத்தப்பட்டுள்ளதாகவும், ஏழாண்டு விடுமுறையை நிறைவு செய்து கொண்டு குறிப்பிட்ட திகதியில்...

ச.லலீசன் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா?? – கல்வி அமைச்சு விசாரணை முன்னெடுப்பு!

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் ச.லலீசன் இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற கோணத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 'தமிழ் வேள்வி 2023' என்ற நிகழ்வில் 'ஈழத் தமிழ்ச் சமுதாயத்தில் தற்பொழுது இளைஞர் அமைப்புகளின் எழுச்சி அவசியமானதா? அவசியமற்றதா?' என்ற தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றத்தில் நடுவராகக் கலந்துகொண்ட...
Ad Widget

யாழ்.பல்கலையின் 38ஆவது பொது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று (14) ஆரம்பமாகியது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பட்டமளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை வரையில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. அதில் 2,873 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் 46 தங்கப்...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இலட்சினையை அனுமதியின்றி பயன்படுத்துவதை தவிர்க்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டு்ள்ளதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 14ஆம், 15ஆம், 16ஆம் திகதிகளில் நடைபெறுவதையொட்டி பல்வேறு ஒளிப்பட, வணிக மற்றும் விற்பனை...

அரச பல்கலைக்கழகங்களில் 28, 29 ஆம் திகதிகளில் வேலைநிறுத்த போராட்டம் – யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் புதன்கிழமை (28) மற்றும் வியாழக்கிழமை (29) ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில் புதன்கிழமை (28) யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் 20.02.2024 திகதியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட...

யாழ்.பல்கலை மாணவர்களின் கால வரையற்ற போராட்டம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையற்று கற்றல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்க தீர்மானித்துள்ளனர். விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் வரவு பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக விசேட நிர்வாக கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம்...

இராமநாதன் நுண்கலைப் பீட மாணவர்கள் போராட்டம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீட மாணவர்கள் இன்று (20) வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழ இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறையில் 4ஆம் வருடத்தில் கல்விகற்கவேண்டிய 3ஆம் வருட 2ஆம் அரையாண்டு மாணவர்களின் விரிவுரை செயற்பாடுகளை துரிதப்படுத்தக் கோரியே இவ்வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்கள் வாயிற் கதவுகளை மூடி போராட்டத்தை மேற்கொண்டு...

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும்!

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிங்கள மக்களுக்கும் கரிநாள் என்பது பொருத்தமானதே என தெரிவித்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், இலங்கை தீவிலே...

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மருத்துவ முகாம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌத்த விகாரையில் மலேசிய வைத்தியர்களின் ஆலோசனையில் மருத்துவ முகாம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள “சரசவி பௌத்த” விகாரையில் குறித்த முகாம் நேற்றையதினம் இடம்பெற்றது. மலேசியாவிலிருந்து வருகை தந்த வைத்தியர் குழுவினரின் வைத்திய ஆலோசனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இதில் அக்குபஞ்சர் சிகிச்சையும் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பௌத்த விகாரை மற்றும்...

போதை மாத்திரை, லேகிய பொதிகளுடன் யாழ். பல்கலை விஞ்ஞான பீட மாணவர் கைது!!

போதை மாத்திரை மற்றும் தடைசெய்யபட்ட லேகிய பைகளுடன் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (20) கோண்டாவில் பகுதியில் உள்ள வாடகை அறையில் வைத்து குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய...

யாழ்.பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கைது!!

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவணொருவனைப் கோப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே நேற்றைய தினம் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த மேதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பல்கலைக்கழக நினைவுத் தூபி விவகாரம்: மீண்டும் விசாரணைக்கு அழைப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறப்படாமல் தூபி அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், தூபி அமைப்புக்கான நிதி கையாளுகை தொடர்பிலும் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் உட்பட மூவர் கொடுத்த முறைப்பாட்டிற்கு அமையவே குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தை மிரட்டும் அநாமதேய அமைப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களையும் அதற்கு அனுமதி வழங்கிய பீடாதிபதிகளையும் தண்டிக்க வலியுறுத்தி திடீரென முளைத்த கிளிநொச்சி வளாக மாணவர் ஒன்றியம் என்ற அநாமதேய அமைப்பு எதிர்வரும் 7ஆம் திகதி வியாழக்கிழமை ஏ- 9 வீதியை மறித்துக் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கான முன்னறிவித்தல் நேற்றிரவு...

யாழ். பல்கலையில் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் தமிழர் தாயகம் எங்கும் கொண்டாடப்பட்டது. அந்தவகையில் நேற்றையதினம் (26.11.2023) யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் ஆதரவுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்ததின நிகழ்வுகள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள், அலங்கரிக்கப்பட்ட இடத்தில் பிரபாகரனின்...

யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழில் சட்டக்கல்வி வேண்டும்!! : விரிவுரையாளர் இளம்பிறையன்

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி மும்மொழிகளிலும் கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சட்டத்துறையில் ஆங்கிலமொழி மூலத்தில் மட்டும் கற்கை நடத்தப்பட்டு வருகின்றது, ஏன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலத்தில் சட்டக்கற்கையை உட்புகுத்த முடியாதென யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினருமான மா.இளம்பிறையன் கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும்...

மாவீரர் வாரம் ஆரம்பம் : யாழ் பல்கலையில் மாணவர்கள் அஞ்சலி!!

மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன்படி இன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவு தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் வாரத்தை முன்னிட்டு, பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதி மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. இதேவேளை...

யாழ்.பல்கலைக் கழக நினைவு தூபி விவகாரம்; ஊழியருக்கு எதிராக பேராசிரியர்கள் முறைப்பாடு

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் பதிவிட்ட பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்தவரும், தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றிவரும் நபருக்கு எதிராகவே இணைய வழி ஊடாக பொலிஸ் மா அதிபருக்கும்( Tell To IGP), யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும்...

மாணவர்கள் போராட்டத்தால் அடிபணிந்த யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

மாணவர்களின் கதவடைப்பு போராட்டத்தை அடுத்து யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்பபெறுவதாக அறிவித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக பல்கலைக்கழக...

போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலைக் கழக மாணவர்கள்!

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக, யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்பல்கலைக்கழக சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்ட சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் “நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்” என்ற தலைப்பில் உரையாற்றியிருந்தார். இதன்போது மாணவர்கள் சிலரால் இடையூறு...

சுவஸ்திகாவை உரையாற்ற அனுமதிக்க வேண்டும் – யாழ் .பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சட்டத்தரணி சுவாஸ்திகா அருலிங்கம் உரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கடந்த 31ஆம் திகதி...
Loading posts...

All posts loaded

No more posts