Ad Widget

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரீட்சைகளை நடாத்துவதில் மாற்றம்!

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரிட்சைகளை நடாத்துவதில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரிட்சைகள் இனிவரும் காலங்களில் பரீட்சைகள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நடாததப்படுமென மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையை அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய முறைமையின் கீழ் விண்ணப்பதாரிகள் அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே, பரிட்சையில் தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுமெனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts