Ad Widget

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளருக்கு கொவிட் தொற்று!

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

மாநகர சபை ஆணையாளருக்கு கொவிட்-19 நோய் அறிகுறிகள் காணப்பட்டதால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருடன் பணியாற்றும் 15 உத்தியோகத்தர்களிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் பிசிஆர் பரிசோதனையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறையினர் குறிப்பிட்டனர்.

Related Posts